Author: Prime Reporter
லெஜண்ட் சரவணன் – துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லீடர்’ படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது; ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளால் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாகனத் தவணைக்கு பணம் தராததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக்கொன்ற இருவருக்கு கோவை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தென்னிந்தியாவின் அடையாளமான இட்லி மற்றும் மொறுமொறுப்பான மெது வடை ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள்; காலை உணவுக்கு ஏற்ற ஆரோக்கியமான டிப்ஸ் இதோ.
தஞ்சையில் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் விஜய் ஆற்றிய உரை குறித்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், மாநில அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்பது தெரிந்திருந்தும் ‘நீட் விலக்கு’ குறித்து ஏன் வாக்குறுதி வழங்கப்பட்டது என விஜய் எழுப்பிய கேள்வி பொருத்தமானது என்றார். அதேபோல் பெண்களுக்கு 100 ரூபாய் சிலிண்டர் மானியம், கரும்பு கொள்முதல் விலை உயர்வு போன்ற அறிவிப்புகள் குறித்து விஜய் முன்வைத்த கேள்விகளும் கவனிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டார். மேலும், ‘டெல்லி அணி – சென்னை அணி’ என்று விஜய் நகைச்சுவையாக கூறிய கருத்தை அரசியல் கோணத்தில் பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார். அதே நேரத்தில், விஜய்யின் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து அவர் அக்கறை காட்டியதையும் பாராட்டிய தமிழிசை, வெயிலில் தொண்டர்கள் அவதிப்படாமல் இருக்க மேடைக்கு மேற்கூரை அமைக்கப்பட்டதற்கு தனது வரவேற்பையும்…
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி இறுதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது; தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து அடுத்த வாரத்தில் படம் திரைக்கு வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா நடிப்பிலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்திலும் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு”. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி பலமுறை மாற்றப்பட்ட நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். நீதிமன்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் பின்னணி பணிகள் நடைபெறும் போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக ஆர்.ஜே. பாலாஜி திட்டத்தில் இருந்து விலகியதாகவும் சமூக…
விஜய் – சங்கீதா விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், சங்கீதாவிற்கு ஆதரவாக திருநங்கை எழுத்தாளர் தனுஜா குரல் கொடுத்துள்ளார்; விஜய் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நாங்குநேரி சம்பவம் போல் அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்து ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூர் மேலத்தெருவில் ஆதி திராவிட மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தபோது அந்த பேருந்து நிறுத்தம் வழியாக அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு சென்ற கும்பல் ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த கும்பல் ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படும் நபர்கள் அனைவரையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் தெருவில் நின்றிருந்த பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டதுடன் இதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் படுகாயமடைந்ததுடன்…
நடிகர் அஜித்தின் கார் பந்தயப் பயணம் குறித்த ஆவணப்படம் திரைப்படமாக வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கோவையில் 4-வது திருமணம் செய்ய இருந்த பெண்ணுடனான கள்ளக்காதல் தகராறில், ஹோட்டல் அதிபரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த லாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
