நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளால் மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் (தமிழக அரசு) சார்பில் சட்டப்பேரவையில் சிறப்புக் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதைய நிலையான 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையேயான தற்போதைய பிரதிநிதித்துவப் பங்கீட்டை மாற்றக் கூடாது என்றும் மத்திய அரசை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல், தற்போதைய 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே உடனடியாக வரவிருக்கும் தேர்தல்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

