தமிழக முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்களுக்காகச் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட உள்ள புதிய அலுவலகப் பணிகள் மற்றும் டெண்டர் அறிவிப்பு வெளியாகி உள்ளன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், நிர்வாக வசதிகள் மற்றும் இடப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படவுள்ளது.
தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சர் அறை, தனிச் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான அலுவலகங்கள், நவீன ஆலோசனைக் கூட்ட அரங்கம் போன்ற வசதிகளை மேம்படுத்தி அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் தோராயமாக ரூ. 5 கோடி முதல் ரூ. 5.5 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை வாயிலாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிப்பதற்காகக் கட்டிடத்தின் பிளாக் 1, பிளாக் 2 மற்றும் பிளாக் 3 என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளதுடன், இதற்கான கட்டுமான மற்றும் வடிவமைப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

