கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
கேரள முன்னாள் முதலமைச்சர் தோழர் @pinarayivijayan அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை (Enforcement Directorate) நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்த தீவிரமான கவலைகளை, இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை எழுப்புகின்றன.
தற்செயலாக, “பினராயி விஜயன் ஏன் இன்னும் பாஜக-வின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை?” என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் உள்ளீடற்ற தன்மையையும் இது அம்பலப்படுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
— M.K.Stalin (@mkstalin) May 27, 2026
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this…

