பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கர்நாடகத்தின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம், காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டரீதியான, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், நீண்டகால நீர்ப்பாசனப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களும் நீர் மேலாண்மை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நீர் பகிர்வுப் பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தமிழக அரசு சார்பில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தருவதற்காக, தேவைப்பட்டால் எந்தவிதமான விமர்சனங்களையும், அவமானங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள அதேவேளையில், மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்வுகாண முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.

