தஞ்சைக் கூட்டத்தில் பேசியபோது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் த்ரிஷா குறித்தே அந்தப் பேச்சைக் குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக, உதயநிதி தயாரிப்பில், விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘குருவி’ படம் மற்றும் அவர்களின் பழைய கூட்டுத் திரைப்பட அனுபவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..
கடந்த 2014-ம் ஆண்டு விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட பழைய ட்வீட் (நீங்கதான் பெஸ்ட்) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “விஜய்யின் ரசிகரான உதயநிதிக்கு இப்போது இப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே” என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

இருவரும் அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக நின்றாலும், இருவருக்கும் இடையேயான பழைய நட்பு மற்றும் பாசம் காரணமாகவே கைதுக்குப் பின்னான நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டப்பட்டதாகக் கூறப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயத்ரி ரகுராம், குஷ்பு உள்ளிட்டோரின் கருத்துக்களும் இச்சம்பவத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

