Author: Prime Reporter
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு எதிராக கோவையில் கடந்த 2013 ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. அப்பொழுது குனியமுத்துரை சேர்ந்த வளையல் ஹக்கீம் என்பவரது வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வளையல் ஹக்கீம், திருநெல்வேலி சேர்ந்த கிச்சன் புகாரி, தென்காசியை சேர்ந்த சையது சுலைமான் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் கைதான மூன்று பேரும் மற்றொரு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் குண்டு பறிமுதல் வழக்கு கோவை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது பெங்களூரில் இருந்து வளையல் ஹக்கீம், கிச்சன் புகாரி, சையது சுலைமான் ஆகிய மூன்று பேரை பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மினோ அடுத்த மாதம் 20…
கேரளா கோழிக்கோடு அருகே இரு தினங்களுக்கு முன், ஷிம்ஜிதா என்ற பெண் பேருந்தில் பயணிக்கும்போது தன்னை அநாகரிகமாக ஓரு நபர் தொட்டுவிட்டார் என்று அவருக்கே தெரியாமல் வீடியோ எடுத்து, ரீல்ஸ் மோகத்ததுக்காகவும், பயனர்களை கவரவும் அந்த நபரின் குணத்தை கேவலபடுத்தி, அவர் மீது வெறுப்பேற்றும் விதமாக பேசி இன்ஸ்டாவில் பதிவு போட அது வைரலாகியது. பேருந்தில் கூட்ட நெரிசலில் அறிந்தோ அறியாமலோ செய்த ஒரு தவறுக்காக, அந்த பெண் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த வீடியோவால் 37 வயதான தீபக் என்ற அந்த நபரை உறவினர்கள், அண்டை வீட்டார்கள், அக்கம்பக்கத்தினர்கள், வேலை பணியாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களும் கீழ்த்தரமாக கமெண்ட்டுகளை போட்டுள்ளனர் தன்னை அறியாமல் நடந்த சம்பவத்தால் அவமானமும், கவலையும், மன உளச்சலும் கொண்ட தீபக், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். ஷிம்ஜிதாவின் ரீல்ஸ் பொறிக்கு இரையான தீபக்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு, பலதரப்பினர்களும் கடும் கண்டனமும்,…
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். முதல் படமான மாநகரம் வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இரண்டாவது படமாக வெளியான கைதியும் அதேபோலத்தான். கைதி மூலம் இந்தியா முழுதும் பிரபலமானவராக மாறிய இயக்குநர் லோகேஷ், அடுத்தடுத்து விஜய்யுடன் இணைந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தை உருவாக்கி இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்து அசத்தினார். லியோவுக்கு பிறகு ரஜினிகாந்த்தை வைத்து கூலி படம் இயக்கியிருந்தார். Blessed with the best @alluarjun #AALoki Looking forward to kicking off this journey with you sir 🤗Let's make it a massive blast 💥💥💥Once again with my brother @anirudhofficial 💥💥#AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026 சில படங்களை தயாரிக்கும் பணியில் மும்முரம் காட்டி வந்த நிலையில, லோகேஷ் இயக்கும்…
பராசக்தி திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் ரசிகர்களை மறைமுகமாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் பதிவாகி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான பராசக்தி திரைப்படம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றும், வசூல் ரீதியாகவும் பெரிய சாதனையை படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய சுதா கொங்கரா, திட்டமிட்டு தாக்கும் விமர்சனங்கள் விஜய் ரசிகர்களிடமிருந்து வருவதாக தெரிவித்தார். இதனை அவர் ரவுடித்தனம் மற்றும் குண்டர்தனம் என வர்ணித்ததுடன், இன்றைய தமிழ் சினிமா கோமாளி ரசிகர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துகள் விஜய் ரசிகர்களிடையே கடும்…
கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே அரசு என்பது இருக்க முடியும் என்றும் ஆனால் ஜனநாயக முறையில் இயங்கும் நம் நாட்டில் அப்படி இருக்க முடியாது என்றும் எனவே நமது ஆட்சி முறைக்கு அது எதிரானது என்றும் கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவை பொறுத்தவரைக்கும் தேர்தலுக்கு அவ்வளவு பெரிய செலவுகள் ஆவது இல்லை எனவும் ஆண்டுக்கு 5 முதல் 6 தேர்தல்கள் நடப்பது நல்லது என்றும் அடிக்கடி தேர்தல் வருவதால் தான் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும், அரசியல் கட்சிகளும் விழிப்போடு இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல்…
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “த..தா. (தந்தையும் தாயும்)” என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அசோகா அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வருமான வரித்துறை உதவி ஆணையர் ஜெயபிரகாஷ் மற்றும் திரைப்பட நடிகர் செல்லா கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் துறை தலைவர் ஜோன் அந்தோணி ராஜா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி விழாவில் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். யோகநாதன் அவர்களின் கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்த “த..தா. (தந்தையும் தாயும்)” குறும்படத்தில் நடிகர் செல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படைப்பு, மனிதனுக்கும் கன்றுக்குட்டிக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை அடிப்படையாக வைத்து மனித உணர்வுகள், உறவுகளின் ஆழம் மற்றும் சமூக பார்வையை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது.…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக அரசின் உரிய உரிமம் இல்லாமல் இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனை அடுத்து உரிய அனுமதி இல்லாமலும் உரிமம் இல்லாததலும் இன்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர், தலமலை, கேர்மாளம் பகுதியில் உள்ள 42 சட்டவிரோத தங்கும் விடுதிகளுக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர் தலைமையில் ஊராட்சி துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஆசனூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் தை 1 பிறக்க உள்ளதால் பொதுமக்கள் கொண்டாட தயாராக உள்ளனர். இந்த நிலையில் வருடா வருடம், பொங்கல் விடுமுறையில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடை வசூல் அதிகமாகும். அதே போல இந்த முறையும் விடுமுறையை கொண்டாட மதுப்பிரியர்கள் மதுவை வாங்க முனைப்பு காட்டி வருகின்றனர். இதனிடையே கோவை டாஸ்மாக் மதுபான கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக @NewIndianXpress நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின்…
கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்து விட்டு அங்கு இருந்து ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே கோவையில் இருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது. காரில் 2 பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக் கொண்டன. இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆம்புலன்ஸ் ரோட்டில் இருந்து அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்ததை பார்த்த பொதுமக்கள் பேட்ரோல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் வரைந்து சென்று காயம் அடைந்து போராடியவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியானது பராசக்தி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து வரலாற்று கதையை கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. படம் வெளியாகும் நேரத்தில் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை ஏற்பட்டு ஒரு சில காட்சிகள் கட் செய்யப்பட்டது. இறுதியில் சொன்ன தேதியில் படம் வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் படம் திராவிடத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும், வரலாற்றை மாற்றி எடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சோலோவாக களமிறங்கிய பராசக்தி படம் 2 நாட்களில் உலகளவில் ரூ.51 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் வெறும் ரூ.27 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. உலகளவில் படம் ரூ.100 கோடியை விரைவில் தாண்டும் என்றாலும் படத்தின் பட்ஜெட், ரூ.150 கோடி…
