நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான கொள்முதல் ஊக்கத்தொகை உயர்வு குறித்த முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற அறிவிப்பு வெளியாகி உள்ளன.
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு
விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, தமிழக வரலாிரில் இல்லாத அளவுக்கு நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை அதிரடியாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
நெல் ஊக்கத்தொகை உயர்வு
சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 289 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து மொத்தம் ரூ. 2,750 வழங்கப்படும். பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 159 உயர்த்தப்பட்டு, மொத்தம் ரூ. 2,600 வழங்கப்படும். மாநில அரசு நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஓராண்டில் ரூ. 156-க்கு மேல் உயர்த்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!
கரும்பு ஊக்கத்தொகை உயர்வு
மத்திய அரசு நிர்ணயித்த விலையுடன் (மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50), தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ. 4,000 கிடைக்கப்பெறும். கரும்பு கொள்முதல் விலை வரலாற்றில் ரூ. 4,000 தாண்டியது இதுவே முதல்முறையாகும்.

