Author: Prime Reporter

தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். அரசியலில் எதுவும் நடக்கலாம் என சொல்வது அவ்வப்போது கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, கடந்த 2024 மக்களவை தேர்தலின் போது தனித்து போட்டியிட்டது. இரு தேர்தல்களிலும் தோல்வியை கண்ட அதிமுக, தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. ஆனால் இபிஎஸ் இணைந்ததால் தேஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார் டிடிவி தினகரன். தேர்தல் நேரம் நெருங்க நெருங்க, இன்று மீண்டும் தேஜ கூட்டணியில் இணைந்துள்ளார் டிடிவி. நேற்று வரை இபிஎஸ் – டிடிவி ஒருவரையொருவர் குற்றம்சாட்டி அரசியல் நடத்தி வந்த நிலையல், இன்று மீண்டும் இருவரும் ஒரே கூட்டணியில் இணைந்துள்ளனர். இந்த நிலையில், தேஜ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது அரசியலில் முக்கியமாக…

Read More

இரண்டு மாதங்களுக்கு தோடர் பழங்குடியினர் மக்கள் விரதம் இருந்து வன பகுதிகளில் தங்கி இருந்து சேகரித்து வரும் மூங்கில், புற்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கூரை வேயும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியை இலங்கை, நார்வே, லண்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள தமிழர்கள் இருந்து தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் குறித்து கேட்டறிந்தனர். நீலகிரி மாவட்டத்தில், தோடர், குரும்பர், கோத்தர், காட்டு நாயக்கர், இருளர் மற்றும் பணியர் ஆகிய, 6 வகையான பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அதில், தோடர் இன மக்கள் வசிக்கும் பகுதி மந்து என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில், 67 மந்துகளில் வசிக்கின்றனர். இவற்றின் தலைமை மந்தாக, தலைகுந்தா பகுதியில் உள்ள முத்தநாடு மந்து உள்ளது. இந்நிலையில், முத்தநாடு மந்து பகுதியில் உள்ள பெரிய கோவிலான மூன்போ தேக்கிசியம்மன் பழமையான கோவில் உள்ளது. இதன் கூரையை, 19 ஆண்டுகளுக்கு பின்…

Read More

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமத்தம் பாளையம் பகுதியில் Spartan Sports Recreation Club FL 2 மதுபான கூடம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒன்னிபாளையம், கோகுலம் காலனியைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்துவரும் 50 வயதான சுரேஷ் என்பவர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த திருமலை நாயக்கன் பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே மதுபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போதையில் இருந்த சுரேஷ் மதுபான கூடத்திலேயே படுத்துவிட்டார். இரவு 11 மணியளவில் மதுபான கூட ஊழியர்கள் கூடத்தை மூடுவதற்காக உள்ளே இருந்த சுரேஷை தூக்கிக் கொண்டு வந்து கூடத்தின் முன் இருந்த கேட் முன்பாக வெளியில் படுக்க வைத்துள்ளனர். இந்தநிலையில் மதுபான கூடத்தில் ஏற்கனவே வாக்குவாதம் செய்த தமிழ்ச்செல்வன் இரவு 11.45 மணிக்கு அங்கு வந்துள்ளார். உடனே தான் வைத்திருந்த அரிவாளால் சுரேஷின்…

Read More

பொதுவாக ஒரு திரைப்படம் மனதுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுவது இயல்பு தான் என்றாலும், தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழை தாண்டி மற்ற மொழி படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். எத்தனையோ தமிழ் படங்களை கொண்டாடிய நம் தமிழ் சினிமா ரசகிர்கள், மலையாள படங்களை அண்மை காலமாக கொண்டாடி வருவது இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆம், திஞ்சித் அய்யத்தன் இயக்கத்தில், பயானா மாமின், சுரப் சச்தேவா, நரேன், வினித், சந்தீப் பிரதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் eko. படம் ஆரம்பம் முதல் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் இறுதி வரை கொண்டு சேர்த்த இயக்குநரின் திறமைக்கு சபாஷ் சொல்லலாம். மலை எஸ்டேட் உச்சியில் வசிக்கும் மலாத்தி என்ற மலேசிய பெண், அவரது கணவன் குரியச்சன் வசிக்கின்றனர். மலாத்தியை தனியாக அங்கு விட்டுவிட்டு எப்போதாவது வந்து பார்த்து செல்லும் கணவர். அவர் பெண் பித்தர், கொலைக்கு அஞ்சாதவர் என குறைகூறும் மக்கள்,…

Read More

கோவையில் அதிர்ச்சி : வாலிபர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை முயற்சி – சமூக வலைதளங்களில் வைரலாகும் அதிர்ச்சி ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள். கோவை, கணபதி, பாரதி நகரில், கஞ்சா போதையில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு வாலிபரை கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் பரவி வருகிறது.இதனை தடுக்க காவல்துறையினர் ‘ஆபரேஷன் கஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு அதிரடி வேட்டைகளை நடத்தி வந்தாலும், போதை ஆசாமிகளின் அட்டகாசம் குறைந்தபாடில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்து உள்ளது. ​கணபதி, பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், ஒரு வாலிபரைச் சூழ்ந்து கொண்ட ஐந்து பேர் கொண்ட போதை…

Read More

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் விஜய்யின் தவெகவில் இணைந்த அவருக்கு மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. தவெக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்தார். அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து அதிமுக, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தவெகவில் அதிருப்தியுடன் இருப்பதாகவும், வேறு கட்சிக்கு தாவலமா என்ற யோசனையில் உள்ளதாக பிரபல செய்தித்தாளில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்து தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்யைடன் அதிரடியாக மறுத்ததுடன், பிரபல செய்தித்தாள் குறித்து விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக்…

Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே தென்றல் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (73) என்பவரின் மகள் மோகனப்பிரியா (34), கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகனப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். பின்னர் விஜயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். விஜயனும் முன்பு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என கூறப்படுகிறது. இருவரும் பெங்களூரில் பணியாற்றி வந்த நிலையில், மோகனப்பிரியா ஐடி நிறுவனத்திலும், விஜயன் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கர்ப்பம் காரணமாக மோகனப்பிரியா பெங்களூரிலிருந்து கணவரின் ஊரான கோவை இடையர்பாளையம் பூம்புகார் நகருக்கு வந்து, வீட்டிலிருந்தபடியே ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அதன் பின்னர் மனஅழுத்தம் மற்றும் பல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி…

Read More

இயக்குநர் அட்லீ ‘ராஜா ராணி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பயங்கர ஹிட் அடித்தது. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடிப்பும், ஜிவி பிரகாஷ் இசை படத்திற்கு பலம் சேர்த்தது. பின்னர், தனது ஆஸ்தான நடிகரான விஜய்யை வைத்து, தெறி படம் எடுத்தார். அந்த படமும் பயங்கர ஹிட் அடித்தது. இதனால் இந்த கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்தது. தெறி, பிகில், மெர்சல் என மூன்று படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால், அட்லீ இந்திய சினிமாவால் கவனிக்கப்பட்டார். இதையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து எடுத்த ஜவான் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, 1000 கோடி வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதனால் அட்லீ மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை இயக்கி வருகிறார்.…

Read More

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில்முக்கிய திருப்பமாக,கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் செல்ஃபோன் உரையாடல் தொடர்பானதடயவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இரவு, பீளமேடு சர்வதேச விமான நிலையம் பின்புற பகுதியில், ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவி, மூன்று இளைஞர்களால்கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகியோர் துடியலூர் அருகே பதுங்கி இருந்த போதுபோலீசாரால் காலில் சுட்டு பிடிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,கருப்பசாமி மற்றும் தவசி காயம் குணமடைந்துள்ளதும், காளீஸ்வரன் இன்னும் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 50 பக்கங்கள் மற்றும் 200 பக்கங்களாககுற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போதுசெல்ஃபோன் உரையாடல் ஆதாரங்கள் அடங்கிய 270…

Read More

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரசுப் பணி வழங்க லஞ்சம் – ₹888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் – ₹1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது! இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களின் சாதனைகள். அமலாக்கத் துறை (ED) சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ₹365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு…

Read More