சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “கடந்த காலங்களில் கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் துறை ரீதியாக காலையிலேயே எங்களிடம் போனில் பேசுவார்கள், அதனால் நாங்கள் டென்ஷனாக இருப்போம்; ஆனால் தற்போதுள்ள அமைச்சர்கள் மிகவும் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டார்.
நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!
இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், “நீங்களாவது 5 ஆண்டுகள்தான் டென்ஷனாக இருந்தீர்கள்… நாங்கள் தினம் தினம் டென்ஷனாக இருக்கிறோம்” என்று கூறினார். முதலமைச்சர் விஜய் சிறிய அளவிலான பிரச்சினைகளைக் கூட நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், இரவு நேரத்திலும் அதிகாலையிலும் கூட பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்து வருவதால், தங்களுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுப்பும் பதட்டமும் இருப்பதாக அவர் நகைச்சுவையாகவும் அதே சமயம் விழிப்புணர்வுடனும் தெரிவித்தார்.

