பொதுவாக பலருக்கு எண்ணெய் வைப்பது பிடிக்காது. அதிலும், சிலரோ காலையில் வைத்தால் சிறந்தது என்பார்கள். இரவு வைத்தால் சிறந்தது என்பார்கள். ஆனால், இதில் பலவித முரண்பாடுகள் இருக்கிறது. அந்த வகையில், தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதற்கு சிறந்த வேலையாக காலை அல்லது இரவு இவற்றில் எது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Table of Contents
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை நேரத்தில் தலைக்கு எண்ணையை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த எண்ணெய் வழக்கம் குழந்தை பிறந்ததிலிருந்து நமக்கு வந்து விடுகிறது. அவ்வாறு, தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு சிறந்தது காலை நேரமா? அல்லது இரவு நேரமா? என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது.

பொதுவாக காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது தலைக்கு ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்யும் என்று நம்பப்படுகிறது. அதுவே, இரவில் தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு படுத்தால் முடியின் வேர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், உண்மை என்னவெனில் வாழ்க்கை முடியின் வகை தேய்க்கும் நேரம் இவற்றை பொறுத்து தலை முடிக்கு கிடைக்கும் நன்மைகள் சிறிது மாறுபடும்.

எண்ணெய் தலைமுடிக்கு ஏன் அவசியம்
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது தலை சருமத்தில் ஊட்டம் அளிப்பதுடன் முடி உதிர்வை குறைக்கின்றது. முடி வேர்களையும், எண்ணெய் தடவுவதன் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. தலைக்கு மெதுவான மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க செய்து முடி வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.

முடியில் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும், முடி உடைதல் மற்றும் பிளவு ஏற்படாமல் பாதுகாக்கவும் இது உதவுகிறது. நாம் பயன்படுத்தும் எண்ணெய் மட்டும் போதுமானது கிடையாது. சீரான உணவு நல்ல உறக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது நமது முடியினை சரியாக பராமரிப்பதற்கு முக்கியமானவைகள்.
அதுவே எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள். காலையில் எண்ணெய் தடவி விட்டு தலைக்கு குளிப்பது சிறந்தது. மேலும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எண்ணெய் தடவினால் போதுமானது. தலை முடியினை பொதுவாக மசாஜ் செய்வதும் நன்றாக அலசுவதும் சிறந்தது. அதிக எண்ணெய் தலைமுடிக்கு தடவக்கூடாது.

எந்த நேரம் சிறந்தது
காலையில் தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தலை சருமத்தை சுறுசுறுப்பாக வைக்கவும். தலைமுடி வறட்சி அடைவதையும் குறைக்கின்றது. எண்ணெய் பசை தன்மை, முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் தலைக்கு காலை நேரத்தில் எண்ணெய் தேய்ப்பது சிறந்தது. தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து ஷாம்பு பயன்படுத்தி குளிப்பவர்களுக்கு காலை நேரம் மிகவும் சிறந்தது.
குறைகள்
என்னவென்றால் காலையில் எண்ணெய் தடவினால் முழுமையாக உறிஞ்சி முடிக்கு போதுமான நேரம் கிடைக்காதாம். மேலும், வெளியே சென்று அழுக்கு, மாசுக்கள் முடியின் நிலையை மோசப்படுத்தும். வெயில் காலத்தில் தலை சருமத்தில் அழுக்கும் சேரும்.

இரவு நேரத்தில், எண்ணெய் தேய்ப்பது
இரவு நேரத்தில், எண்ணெய் தடவினால் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் உலர்ந்த சேதத்தையும், முடியை சீரமைக்கவும் செய்யும். இரவில், எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது நல்ல உறக்கமும், மன அமைதியும் கிடைக்கும். வறண்ட தலை முடி மற்றும் சேதுமடைந்த தலைமுடி உள்ளவர்கள் இரவு நேரத்தில் எண்ணெய் தடவுவது சிறந்தது.

குறைகள்
சரும துளைகள் அடபட்டு பொடுகு பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தலைமுடியை முழுவதும் மூடவில்லை எனில், தூசி ஒட்டவும் வாய்ப்பு உள்ளது. எண்ணெய் சுரப்பு அதிகம் உள்ளவர்கள் இரவில் தலைக்கு எண்ணெய் தடவுவது பொடுகு பிரச்சனையும் ஏற்படுத்தும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

