ரோஸ்மேரி ஆயில் மிகவும் அடர்த்தியானது என்பதால், அதை நேரடியாகத் தலையில் தடவக் கூடாது. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு கேரியர் எண்ணெய்யுடன் சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலந்த எண்ணெய்யைத் தலைமுடி வேர்க்கால்களில் (Scalp) படும் வகையில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
நாவில் கரையும் கடலை மிட்டாய்.. எளிய செய்முறை..!
இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டும். எண்ணெய்யைத் தடவிய பிறகு குறைந்தபட்சம் 1 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே ஊறவிட்டு, பின்னர் மிதமான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் அலசலாம். நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சில துளிகள் ரோஸ்மேரி ஆயிலை நேரடியாகக் கலந்தும் பயன்படுத்தலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

