கண்களின் கீழ் உள்ள கரு வளையங்கள் மற்றும் சோர்வைப் போக்க நாம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இயற்கையான ஐ மாஸ்க்குகளைத் தயாரிக்கலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் ரோஸ் வாட்டர் மாஸ்க்
வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சம அளவு கலந்து, பஞ்சின் உதவியால் கண்களின் கீழ் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இது கண்களுக்குக் குளிர்ச்சி அளித்து கருவளையத்தைக் குறைக்க உதவும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கில் உள்ள இயற்கையான ப்ளீச்சிங் தன்மைகள் கண்களுக்குக் கீழே உள்ள கருமையைப் போக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு சாற்றில் நனைத்த பஞ்சைக் கண்களின் மீது 10-15 நிமிடங்கள் வைக்கலாம்.
ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!
டீ பேக் மாஸ்க்
பயன்படுத்திய கிரீன் டீ அல்லது பிளாக் டீ பேக்குகளை குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்துக் குளிரூட்டிய பின், கண்களின் மீது சில நிமிடங்கள் வைக்க கண்கள் புத்துணர்ச்சி பெறும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு
தக்காளி சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கண்களுக்குக் கீழே தடவி வந்தால், சீக்கிரமே கருவளையங்கள் மறையும் (எலுமிச்சை சாறு அதிகம் எரிச்சல் தந்தால் தவிர்ப்பது நல்லது).
கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய்
கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து இரவு தூங்கும் முன் கண்களுக்குக் கீழே லேசாக மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலை கழுவலாம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

