Browsing: கோவை
கோவையில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது கல் வீசிய விவகாரத்தில் 7 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்புவிகப்பட்டுள்ளனர். தண்டவாள ஓரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள ஆர்.பி.எப்., கல் வீச்சு புகார்களுக்கு 139 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.
கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் அருகே பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சாம்பலாகின. அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணியச் சொன்ன பாதுகாவலரை, மதுபோதையில் இருந்த வாலிபர் பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் த.வெ.க தொண்டன் என அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகிறது.
கோவையில் சிக்கன் வாங்க வந்த இடத்தில் கல்லாப்பெட்டி பணத்தை வாலிபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடைக்காரர் இல்லாத நேரத்தில் நடந்த இந்த துணிகரத் திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கோயம்புத்தூர் மதுக்கரை அருகே மாந்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கோவையில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்டுகளைத் திருடும் கணவன் – மனைவி; சிசிடிவி ஆதாரத்துடன் பால் முகவர் வெளியிட்ட வீடியோ வைரல்.
வெள்ளியங்கிரி 4-வது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 32 வயது இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் எச்சரித்தும் மீண்டும் மலை ஏறியதால் நேர்ந்த விபரீதத்தால் 7 வயது மகன் தவிப்பு.
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்கவும், ஜவுளித் துறையை மேம்படுத்த ₹1500 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் வட்டி மானியம் வழங்கவும் கோவையில் சிடிஐ (CITI) வலியுறுத்தியுள்ளது.
