திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் மருத்துவமனை பாதுகாவலரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தினம் தோறும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகவும், நோயாளிகளை பார்க்கவும் வந்து செல்வது வழக்கம் நேற்று மாலை குடிபோதையில் ஒரு வாலிபர் மருத்துவமனைக்கு வந்துள்ள அங்கிருந்த பாதுகாவலர் (செக்யூரிட்டி) மாஸ்க் அணிந்து உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த வாலிபர் தகாத வார்த்தையால் பாதுகாவலரை பிளேடால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மதுதலைக்கேறி அந்த வாலிபர் நான் ஒரு த.வெ.க. தொண்டன் எனக்கூறி வெகு நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

