கோவை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக, தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்க பட்டு வந்து செல்லும் நிலையில், உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் படுக்கையில், மூட்டை பூச்சிகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
அதுவும் அரசால், சமீபத்தில் திறக்க பட்டுள்ள புதிய கட்டிடத்தில் இந்த நிலை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளையே நாடியே இருக்கும், நிலையில், அரசு மருத்துவமனையின், நிர்வாக சீர்கேடு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கும், அவதிக்கும் உள்ளாகி வருகின்றதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!
பொதுமக்கள் வெளியிட்ட வீடியோவில், மூட்டை பூச்சி, வார்டு அறை முழுவதும் ஊர்ந்து செல்லும் வீடியோ பதிவாகி உள்ளது இது நோயாளிகளை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ளது. மருத்துவ துறை அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கையறைகளை முறையாக பராமரிப்பது இல்லை, அதனை சுத்தம் செய்வதில்லை அதுவே இதற்கு காரணம்.
இதற்கு தீர்வு கிடைக்காதா என்று பொதுமக்கள் கேள்விகளுக்கு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மற்றும் ஒரு வீடியோ பதிவில், நோயாளியை சுமார் இரண்டு மணி நேரமாக எந்த வித சிகிச்சையும் அளிக்காமல் படுக்க வைத்திருப்பதாகவும் அதனை எதிர்த்து சிகிச்சைக்காக வந்துள்ள ஒருவருடன் வந்துள்ள நபர் கேள்வி எழுப்பும் வீடியோவும் வைரலாகி வருகின்றது.

