கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் திரிஷா குறித்து பல்வேறு விமர்சனங்களும் வதந்திகளும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. அத்தகைய விமர்சனங்களை இருவரும் கூலாகவே எதிர்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சராக முனைப்போடு செயல்பட்டு வரும் விஜய், அவை ஆக்கபூர்வமாக இருக்கின்றனவா என்பதில் இங்கே விவாதம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் தீயாக பரவியது அதாவது, நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் மற்றும் திரிஷா குறித்து தவறான முறையில் பேசியது போல் பரவி இருந்தது. அதாவது, சமீபத்தில் யாஷிகா ஆனந்த் கடற்கரையில் போட்டோ ஷூட் செய்திருந்தார். அந்த வீடியோவை ஒருவர் ஷேர் செய்து பொது இடத்தில், அரைகுறை ஆடையோடு இப்படி செய்தால் முதலமைச்சர் விஜய் உங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார் என சொன்னது போன்றும், அதற்கு யாஷிகா அவர் நடிகை திரிஷாவோட பிஸியாக இருப்பார் என்று கூறியது மாதிரியும் அந்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வட்டமடித்தது.
இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!
இந்நிலையில், அது தொடர்பாக யாஷிகா ஆனந்த் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரது, எக்ஸ் தள பக்கத்தில் இப்போது பரவி வரும் விஷயம் முழுக்க முழுக்க என்னை கீழே தள்ளிவிட்டு தங்களது பேஜுக்கான பிரபலத்தை பெறுவதற்காக சிலர் உருவாக்கிய கற்பனை கதை தான், நான் தவறான ஒன்றை பயன்படுத்துவது மாதிரி முன்பு AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான படத்தை பரப்பினார்கள். இதுவும் அதே மாதிரி ஒரு அல்பத்தனமான செயல். மோசமான பேஜுக்கள் லைக் காக என்ன செய்தாலும் அதை நம்பாமல் புறக்கணித்து விடுங்கள் என்று அதில் தெரிவித்து இருந்தார்.
Hey! Whatever is getting circulated is absolutely made out of their own interest of putting me down and gaining popularity for their pages ! Just like how fake dildo image was circulated ( ai generated) This is also crap 🤣 ignore and don’t believe what shitty pages do forLikes
— Yashika Anand (@iamyashikaanand) June 8, 2026

