Browsing: கோவை
கோயம்புத்தூரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்ற ‘Flight of Fantasy 5.0’ நிகழ்ச்சி குறித்த நெகிழ்ச்சியான தொகுப்பு
கோவை இருகூரில் தவெக கொடியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற போதை கும்பல் காவலரை தாக்கியதால் பதற்றம். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை கணியூரில் பசுமை வாக்குச்சாவடி அமைத்து வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக கடமையை வலியுறுத்தும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கோவையில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், தேர்தல் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறி, தேர்தலை நிறுத்த வலியுறுத்தி அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், அன்னூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5,102 மதுபாட்டில்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறைபாட்டால் இளைஞர் உயிரிழந்ததாக விபத்தில் தப்பியவர்கள் வெளியிட்டுள்ள பகீர் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் செல்ல வனத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. இதன் முழு விவரங்கள் இங்கே.
பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புது விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே பணப்பட்டுவாடா வழக்கில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது வெறும் பதவியல்ல, அது ஒரு பொறுப்பு என கோவையில் நடைபெற்ற ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார்.
