கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கோலார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சூர்யா (25) இவர் வழக்கம் போல தனது பணிகளை முடித்து விட்டு வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நேற்று பூட்டி விட்டு சென்று உள்ளார்.இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்த போது சூர்யாவின் இரு சக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து கோமங்கலம் காவல் நிலையத்தில் சூர்யா புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்த மூன்று நபர்கள் சூர்யாவின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்.. ‘Drugs Culture’ அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வு..!
மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் கொலை ஆயுதமான பட்டாக் கத்தியை கொலைச் சம்பவத்தில் ஈடுபடும் போது வைத்து இருந்தது அங்கு உள்ள சி.சி.டி.வி ஒன்றில் பதிவாகி உள்ளது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் தீவிரமாக ஹெல்மட் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

