கார தோசை மற்றும் வெள்ளைச் சட்னியை காலை உணவுக்கு மிக எளிமையாகச் செய்து விடலாம்.
கார தோசை செய்முறை
தேவையான பொருட்கள்
- தோசை மாவு – 2 கப்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் அல்லது நெய் – தேவைக்கு ஏற்ப
- உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
Step 1: தோசைக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாகத் தேய்க்கவும்.
Step 2: அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, தோசை மொறுமொறுப்பாக வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் – 1 கப்
- பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – சிறிய துண்டு
- பூண்டு – 1 பல்
- உப்பு – தேவையான அளவு
- தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை
Step 1: ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!
Step 2: ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
Step 3: தாளித்த கலவையை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்தால், சுவையான வெள்ளைச் சட்னி தயார்!
குறிப்பு: கார தோசைக்கு இந்த வெள்ளைச் சட்னி மிகச் சிறந்ததாக இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்!

