கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் உட்கோட்டம், ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியின் ஏழு வாய்க்கால் பகுதியில் பிடிபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏழு வாய்க்காலைச் சேர்ந்த நஞ்சப்பகவுண்டர் (58) என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் விவசாயத் தோட்டத்தில் தக்காளி பயிரிடப்பட்டுள்ள நிலையில், தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது புதர்ப் பகுதியில் பெரிய மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை தொழிலாளர்கள் கண்டனர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போளுவாம்பட்டி வனக்காப்பாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான வனத்துறையினர், சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு புதருக்குள் பதுங்கியிருந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர்.
வரியை வாங்கிட்டு நிதியை குறைப்பதா?.. தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக மாணிக்கம் தாகூர் சாடல்..!
தற்போது பருவமழை பெய்து வருவதால், அருகிலுள்ள ஏழு வாய்க்கால் பகுதி வழியாக மலைப்பாம்பு தோட்டத்திற்குள் நுழைந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பை சாடிவயல் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விடுவிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

