Browsing: Coimbatore local news
கோவையில் வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் மீது கல் வீசிய விவகாரத்தில் 7 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்புவிகப்பட்டுள்ளனர். தண்டவாள ஓரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ள ஆர்.பி.எப்., கல் வீச்சு புகார்களுக்கு 139 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது.
கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 72 வயது மூதாட்டி ஜெசி என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த நோபிள் வாட்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வாளையார் அருகே கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் மோதி கேரளாவைச் சேர்ந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.
ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஜனநாயகம் செத்துவிடும் என்பதை வலியுறுத்தி, சுடுகாட்டிலிருந்து இறுதிச்சடங்கு பானையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நூர் முகமது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கோவை சூலூரில் மாவட்டத்தின் முதல் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் மற்றும் செல்பி பாயிண்ட் திறப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
