தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முக்கிய விவரங்கள் மற்றும் அறிவிப்புகள்
ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை ஆன்லைன் விற்பனை என தவறான செய்தியை பரப்ப வேண்டாம் – அமைச்சர் விக்னேஷ்
மதுவிலக்கு துறையில் ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்கள் தவறானவை.
ஆன்லைன் என்று புதிய அறிவிப்பின் மூலம் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல்கள் தடுக்கப்படும் – அமைச்சர் விக்னேஷ்
கள் விற்பனை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் – அமைச்சர் விக்னேஷ்
இணையத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி மட்டுமே உள்ளது. அதன்பின் ரசீதுடன் நேரில் சென்று மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். டோர் டெலிவரி அல்லது ஆன்லைன் டெலிவரி வசதி கிடையாது.
மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!
ஆன்லைன் முறையின் மூலம் எந்த மதுபானக் கடையில் என்னென்ன வகையான மதுபானங்கள் இருப்பு உள்ளன என்பது வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.
இந்த நடைமுறையால் டாஸ்மாக் பணியாளர்களின் பணிச்சுமை குறைவதுடன், 10 ரூபாய் கூடுதல் வசூல் போன்ற முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும்.
முதல்வரின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் மாற்றம் செய்யப்படும்.
10 ரூபாய் கூடுதல் வசூலை கட்டுப்படுத்த முந்தைய ஆட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஊழியர்களின் ஊதியம், மின்சார கட்டணம், மதுபான அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து நிர்வாக சிக்கல்களையும் படிப்படியாக சரிசெய்து வருகிறோம் என செய்தியாளர்கள் சந்தித்து தெரிவித்துக் கொண்டார்

