சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில்குமார் அளித்த புகாரில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கோடு தன்னைத் தொடர்புபடுத்தி விடுவதாக மிரட்டி இன்ஸ்பெக்டர் முகமது புகாரி ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், போதைப்பொருள் வழக்கிலும் சிக்கவைப்பதாகக் கூறி ஊர்காவல் படைச் சீனிவாசன் மூலம் கூடுதலாக ரூ.5 லட்சம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் முகமது புகாரி மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் பயன்படுத்திய சிம் கார்டு அகில்குமார் பெயரில் இருந்த காரணத்தாலேயே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ள சூழலில் தனிப்படை போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

