Author: Prime Reporter

சின்ன பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது சல்லியர்கள். வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தை கிட்டு என்பவர் இயக்கியுள்ளார். சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருந்தனர். ஆனாதல் போதுமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்காததால் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது குறித்து PVR சினிமாஸ் குரூப்பை நேரடியாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அதாவது இன்று வெளியிட இருந்தோம். வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு பார்த்தால் திரையரங்குகள் கிடைக்கவில்லை. வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் பரிதாபமாக இருக்கிறது. வெறும் 27 திரையரங்குகளை வைத்துக்கொண்டு படத்தை எப்படி வெளியிடுவது? அதனால் எங்கள் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.ஆனாலுய்…

Read More

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்டவிரோத கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டு கோம்பைப்பட்டி சாலையில் போலீசார் வாகன சோதனைகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே புதிய இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டதும் அதிவேகமாக தப்பி சென்றனர் அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் வாகனத்தை சோதனை செய்த போது அதில் கால் கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர். விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லரை விற்பனையில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து கோம்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (19) ஹரிஷ் (20) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய புதிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கேட்பதற்கு யாரும் இல்லாத புள்ளிங்கோ ஸ்டைலில் செயல்பட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் போலீசாரால் கைது…

Read More

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் கஞ்சா புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது பொய்யான தகவல். ‘முழு பூசணியை சோற்றில் மறைப்பது’ என்ற பழமொழியைக்கூட விடாமல், தி.மு.க. அரசு ‘முழு பாறாங்கல்லையே சோற்றில் மறைக்க’ முயற்சிக்கிறது. இவ்வாறு மக்களை இன்னும் எத்தனை காலம் ஏமாற்ற முடியும் என்பதே கேள்வி; தி.மு.க. அரசு விரைவில் தூக்கி எறியப்படும் என்றார். மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவத்தின் போது சம்பவ இடத்திற்குச் செல்லாத முதலமைச்சர், தேர்தல் நேரங்களில் மட்டும் அங்கு செல்வது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் புகைப்படப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார் என்றும் விமர்சித்தார். அதேபோல், திருத்தணியில் வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Read More

தமிழ்நாடு காவல்துறை மற்றும் நிர்வாகத் துறைகளில், பெரிய அளவிலான பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, Armed Force டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு.ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக பதவி உயர்வு. Armed Force DGP யாக நியமனம் .ஏடிஜிபி சந்தீப் மிட்டல் பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் டி.ஜி.பி.,யாக நியமனம் .ஏடிஜிபி பால நாகதேவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம். சிபிசிஐடி ஐஜி அன்பு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம். ஆவடி கமிஷனர் சங்கர் தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மொடாக் ஆகியோர் மாற்றம்.தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல்…

Read More

கோவையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஒரு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள் அதிவேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, கரும்புக்கடை ஆசாத் நகர், ஐந்தாவது வீதியில் விடுமுறை தினம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மூன்று சிறுவர்கள் எவ்வித முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பாமல் அதிவேகமாக வந்தனர்.மேலும் வேகத்தை குறைக்காமல், வந்து அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள் மீது மோதிய வேகத்தில் வாகனத்தை நிறுத்த முடியாமல் சிறிது தூரம் சென்று நிறுத்தினர். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் நடந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த…

Read More

இந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஏற்கனவே பிரபல நடிகரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அவர், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். சினிமாவில் இருந்து சில காலம் பிரேக் எடுத்துக் கொண்ட அவர், தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். இதனிடையே இயக்குநர் ராஜ் நிடிமோருடன் கோவை ஈஷா மையத்தில் திருமணமும் செய்தார். சமீபத்தில் மாமியார், மாமனாருடன் சமந்தா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது. இதைத்தொடர்ந்து கணவருடன் தற்போது போர்ச்சுகல் நாட்டுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளார். View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl) அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பலரும் வாழ்த்துக்களை சமந்தா தம்பதியினருக்கு கூறி வருகின்றனர்.

Read More

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை தொடர்ந்து காலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வருகின்றனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே வந்த போதை ஆசாமி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போதையில் இருந்த வாலிபர் தான் கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து திடீர் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாரை ஆக்ரோஷமாக தாக்க முயற்சி செய்துள்ளான். இதனை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த காவலர் ராமகிருஷ்ணன் தன்னை தற்காத்து கொள்ள தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கொண்டு தடுக்கவே அருகே இருந்த மற்ற காவலர்கள் போதை ஆசாமியை மடக்கி பிடித்து கத்தியை பிடிங்கினர். அதனை தொடர்ந்து போதையில் இருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவரிடம்…

Read More

கரூரில் பிரபல தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கியுள்ளார் பிரபல சீரியல் நடிகை. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நடிகை ராணி, பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்துள்ள அவருக்கு பாலாஜி என்கிற பாலமுருகன் என்கிற கணவர் உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு கரூரில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்துள்ளார். ரூ.10 லட்சம் குத்தகைக்கு பேரம் பேசிய நிலையில் பணம் இன்னும் தரவில்லை. கடந்த மாதம் கரூர் வந்த பாலாஜி, விடுதி உரிமையாளரான நாமக்கல்லை சேர்ந்த தினேஷிடம், உங்களுடை சொகுசு கார் என் மனைவிக்கு பிடித்துள்ளது, இரண்டு நாள் பயன்படுத்திவிட்டு தருவதாக கூறியுள்ளார். உடனே உரிமையாளரும், எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால் காருக்குள் 5 சவரன் வைரத் தோடு இருந்துள்ளது. இதையடுத்து பாலாஜிக்கு போன் செய்து, காருக்குள் இருக்கும் வைர நகைகள் மனைவியுடையது. நகை மற்றும்…

Read More

பெரிய நடிகர்களின் திரைப்படங்களை விட தற்போது சின்ன பட்ஜெட்டில் எடுக்கும் படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறது. சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் சிறந்த எடுத்துக்காட்டு. எண்ணற்ற படங்கள் வெளியாகி மக்கள் மனதை கொள்ளையடித்து போகின்றன. அந்த வரிசையில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான படம் சிறை. விக்ரம் பிரபு நடிக்க, சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்த சிறை படம் ஏராளமான ரசிகர்களின் வரவேற்புக்கு மத்தியில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து சிறை படத்தை பார்த்த பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் மனம் திறந்து பாராட்டியது மட்டுமல்லாமல், பெரிய பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இது உண்மையிலேயே ஒரு சிறந்த படம். பல இடங்களில் கண்கலங்கச் செய்தது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, படம் முடிந்த பிறகும் மனதில் நிலைத்திருக்கின்றன. #Sirai- Such a good film.…

Read More

கோவையில் 9.5 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை பெத்தி குட்டையில் ரூபாய் 19.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து தற்பொழுது ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூபாய் 9.5 கோடியில் கட்டப்பட்டு உள்ள ஹாக்கி மைதானம் திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி…

Read More