Author: Prime Reporter
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹப் (sports hup) என்ற கடையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு இருந்த பொருட்களை பார்வையிட்டார். பின்னர் ரசீது பதிவு செய்யும் கணினி டேபிள் அருகே வந்து நின்ற பெண் அங்கும், இங்கும் பார்வையிட்டு பின்னர் நைசாக அந்த டேபிளில் இருந்த வாசனை திரவியம் பாட்டிலை எடுத்துக் கொண்டு நைசாக அங்கு இருந்து வெளியே செல்கிறார். இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.இந்நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கடை உரிமையாளர் பார்த்தார். அப்பொழுது அந்தப் பெண் உள்ளே இருந்து வாசனை திரவிய பாட்டிலை நைசாக எடுத்துக் கொண்டு காட்சிகளைப் பார்த்த அவர் மேலும் இதேபோன்று பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் உரிமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், மேலும் இதுபோன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை…
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம் பள்ளி முடிந்து தனியாக வீடு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து, வாயை பொத்தி மாந்தோப்பில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர் தப்பியிருந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீசார் வெகுநாட்களாக தேடிவந்தனர். 9 தனிப்படைகளை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் குற்றம் நடந்து 13 நாட்களுக்கு பின்னர் சூலூர் பேட்டை ரயில்நிலையத்தில் வைத்து அசாம் மாநிலத்தை சேர்நத் பிஸ்வகர்மா என்பவனை போலீசார் கைது செய்தனர், இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 1, பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இதுவரை 22முறை குற்றவாளி ஆஜராகியிருந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 1.45 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சாகும்வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு நடந்த 5 மாதத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை…
கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் களவு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தடய அறிவியல் நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே நன்றாக பழக்கம் உள்ள நபர்கள் யாராவது இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலிசார் சம்பவ…
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. சினிமாவில் இருந்து விடை பெறும் விஜய்யின் கடைசி படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர். வரும் ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில், நாளை மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்த உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் விழா வெளிநாடுக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ஏராளமான திரைப்பிரபலங்கள் மலேசியா ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயக்குநர் நெல்சன், அட்லீ ஆகியோர் மலேசியா புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அது போல ரசிகர்கள் பலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்க மலேசியா புறப்பட்டனர். இதனால் சென்னை விமான நிலையம் ஸ்தம்பித்திருந்தது. தற்போது நடிகரும்,…
பாமகவில் சமீப காலமாக தந்தை மகன் மோதல் அதிகரித்து வருகிறது. பாமகவில் கௌரவ தலைவராக உள்ளவர் ஜிகே மணி. இவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் ஜிகே மணியை கட்சியை விட்டு நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். முன்னதாக அன்புமணி கூறும் போது, தந்தை மகன் மோதலுக்கு காரணம் ஜிகே மணி தான் என்றும், தனக்கு மத்திய அமைச்சராக வாய்ப்பு கிடைத்ததை ஜிகே மணி தடுத்து நிறுத்தியதாக குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த ஜிகே மணி, அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்குவதை ராமதாஸ் எதிர்த்தார். ஆனால் அன்புமணிக்கு நான் உறுதுணையாக இருந்தேன். மேலவை உறுப்பினராக எனக்கு கிடைத்த வாய்ப்பை அன்புமணிக்காக விட்டு கொடுத்தேன். ஆனால் தற்போது அவர் என்னை விமர்சிப்பது வருத்ததமாக உள்ளதாக கூறினார். இதனிடையே பாமகவில் இருந்து ஜிகே மணியை நீக்குவதாக அன்புமணி அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சி களங்கம் ஏற்படுத்தியதாகவும், இது குறித்து கடந்த…
சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு. நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார். மருத்துவராக, வக்கீலாக, காதல் தேவதையாக பல படங்களில் நடித்த அவருடைய சினிமா கேரக்டர்களில் ஜீன்ஸ் படத்துக்கு என தனியிடம் உண்டு. படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் அழுத்தமான கேரக்டர். பிரசாந்த் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைக்கும் கேரக்டர். நடிப்பில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து…
நடிகர் விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ள நிலையில், ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என கூறியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. அதே சமயம் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நாளை 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அந்நாட்டு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ரசிகர்கள் மலேசியா செல்ல ஆயத்தாமாகியுள்ளனர். Thalapathy Fans take over MALAYSIA 😎🔥#JanaNayaganAudioLaunch pic.twitter.com/fmvb1AMt0K— Harish N S (@Harish_NS149) December 26, 2025 இந்நிலையில் மலேசியா செல்ல விஜய் ரசிகர்கள் பன்னாட்டு விமான நிலையங்களில் காலை முதலே திரண்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நடிகர் விஜய் மலேசியா புறப்பட வருகை…
கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர் ரமணன் என்பவர் அங்கு தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ரமணன் அறை கதவு திறந்து இருந்த நிலையில், ஆழ்ந்த உறக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ரமணன் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவர் பையுடன் இருந்த லேப்டாப் எடுத்துச் சென்றார். கண் விழித்து எழுந்த ரமணன் தனது லேப்டாப் உடன் இருந்த பையை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கம் இருந்த அறைகளில் முழுவதும் தேடிய பின்னர் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரிடம் கூறி உள்ளார். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்று பையை…
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 101-ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, சமூகத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அற்புத நபர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளதாக கூறினார். கிறிஸ்துமஸ் விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டதாகவும், ஆனால் சில இடங்களில் கிறிஸ்துமஸ் விழா தடுத்து நிறுத்தப்பட்டதும், அடித்து உடைக்கும் சம்பவங்களும் நடந்தது துரதிஷ்டவசமானது என்றும் தெரிவித்தார். இத்தகைய நிகழ்வுகள் விரும்பத்தகாதவை என்றும், இதை கண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முழு உரிமையுடன் கொண்டாட கிறிஸ்துவ நண்பர்களுக்கு உரிமை உள்ளது; இதனை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல பிஷப்புகள் நேரடியாக பிரதமரை சந்தித்து பேசிவருவதாகவும்…
படிப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் காயமடைந்து நடக்க முடியாமல் வீல் சேரில் வந்த பிரபல நடிகருக்கு திரையுலகத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் விநாயகன். சர்ச்சைக்கு பெயர் போன விநாயகன், தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் இறந்து போன் விநாயகன், 2ஆம் பாகத்தில் எப்படி திரும்பி வருகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் மலையாளத்தல் ஆடு 3 என்ற படத்தில் நடித்து வரும் விநாயகன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், கழுத்தை அசைக்க முடியாமல் வீல் சேரில் வலம் வந்தார். கழுத்து, தோள்பட்டை பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், நரம்பு பாதித்துள்ளதாகவும், விட்டிருந்தால் முடங்கி போயிருப்பேன் என விநாயகன் கூறினார். மருத்துவர்கள் 6 வாரம் ஓய்வு எடுக்க கூறியுள்ளதால் தற்போது படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்றும் கூறினார்
