நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு நானே செய்துகொண்ட 1000 நாட்கள் சவாலில் தற்போது 484-வது நாளில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தான் எழுதிய கனவுப் பட்டியலில் இருந்த சில விஷயங்கள், அவற்றை எழுதும்போதே தனக்குக் கூச்சமாக இருந்ததாகவும், ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போது சாத்தியமே இல்லை என்று நினைத்த பல விஷயங்கள் தனது நிஜ வாழ்க்கையாக மாறியுள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!
“உங்கள் கனவுகளுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயியுங்கள்; சுற்றியிருக்கும் எதிர்மறையான சத்தங்களைப் புறக்கணியுங்கள்; தலைகுனிந்து உங்களுக்கான வேலையை மட்டும் செய்யுங்கள்” என்று அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மற்றவர்களுக்கு அது பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும், உங்கள் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையை ஒருபோதும் தளரவிடாதீர்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

