Author: Prime Reporter
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய அவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனியாக நின்றார்கள். நாங்களும் தனியாக நின்றோம். தற்போது பிஜேபி அதிமுக என எங்களுடன் கூட்டணிகள் இருந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் கருத்துக்கணிப்பில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 50% வந்திருக்கிறது. திமுகவிற்கு 42 முதல் 42 சதவீதமே வந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு எழுதப்பட்ட வெற்றியாக உள்ளது என்று மக்கள் கூறிவிட்டனர். 192 சட்டமன்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார் ஆனால் முதல்வர் ஒரு இடத்திற்காவது சென்றிருப்பாரா என்றால் கிடையாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே…
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கியூட்டான ஹல்தி புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் 18 நாட்களில் உலகளவில் ஈட்டிய மொத்த வசூல் விபரங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகை குஷ்பூ விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும் என்றார்
ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு Sunrisers Hyderabad அணியில் தலைமை மாற்றம் ஏற்படக்கூடும் என்ற செய்திகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அணியின் தற்போதைய கேப்டனான Pat Cummins கிடைப்பது குறித்த அனிச்சைகள் நிலவுவதால், அவருக்குப் பதிலாக Ishan Kishan கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. Pat Cummins கடந்த சில மாதங்களாக சர்வதேச மற்றும் லீக் போட்டிகளில் முழுமையாகச் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு, அவர் மிகக் குறைவான போட்டிகளில் மட்டுமே களம் இறங்கியுள்ளார். ஜூலை 2025-இல் West Indies cricket team அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், The Ashes தொடரில் ஒரு போட்டியிலும் மட்டும் பங்கேற்ற அவர், அதன் பின்னர் எந்தப் போட்டியிலும் ஆடியதாக இல்லை. இதனால், அவர் ஐபிஎல் 2026-இல் முழுமையாக கிடைப்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்த நிலையில், Ishan…
ஆதவ் அர்ஜூனா ரஜினிக்கு எதிராக பேசியது பேசுபொருளான நிலையில், விஜய் கண்டித்திருக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கூறியுள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதவ் அர்ஜுனாவின் ரஜினிகாந்த் அவர்கள் குறித்த அவதூறான கருத்துக்கு எழுந்திருக்கிற எதிர்ப்பும், அதற்கு திரு. ரஜினிகாந்த் அவர்களே ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து “காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும்” என்கிற கருத்து மூலம் தேர்தலில் நிச்சயம் தவெக தொண்டர்களுக்கு எதிராக ரஜினியும் அவரது ரசிகர்கள் இயங்குவார்கள். அது விஜயின் வாக்கு வங்கியை சிதைக்கும், பொதுமக்களிடமும் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். திரு.விஜய் எல்லா காலகட்டத்திலும் அமைதியாக மௌனம் காப்பது தவறு, குறைந்தபட்சம் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து விஜய் கருத்து தெரிவித்திருக்க வேண்டும். திரு.ரஜினிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். தற்பொழுது ஆதவ் அர்ஜுனா ” மாற்றுக் கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் திருப்பி அடிக்க வேண்டாம்,…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தனது தேர்தல் நடவடிக்கைகளை வேகமெடுத்துள்ளது. கட்சியின் விரிவாக்கம், வலுப்படுத்தல் மற்றும் வாக்காளர்களை அணுகும் முயற்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசியல் சூழலில், வட சென்னை பகுதிக்குட்பட்ட முக்கியமான பெரம்பூர் தொகுதியில் தவெக சார்பில் தலைவர் விஜய் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன. இந்த தகவல், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனுடன் இணைந்து, பெரம்பூர் தொகுதியில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர்…
நடிகை நயன்தாரா குறித்து பேசிய கருத்து சர்ச்சையாகி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது
கஞ்சா போதையில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் விரட்டி தாக்கிய இளைஞர்கள் சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி அருகே கஞ்சா போதைக் கும்பல் இளைஞர்கள் கண்ணில் கண்ட பெண்களை விரட்டித் தாக்கி அவர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காணொளி சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மதிகெட்ட இளைஞர்கள் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அத்துமீறி இருப்பது விடியா திமுக ஆட்சி போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து தமிழக இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தின் அப்பா என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதியோர், பெண்கள், மாணவிகளிடம் போதையில் வீரத்தைக் காட்டும் அளவிற்கு தமிழக இளைஞர்களை மாற்றி இருப்பது இந்த தீய ஆட்சியின் சாபக்கேடு..! இளைஞர் சக்தியை மீட்க, போதைக் கலாச்சாரத்திலிருந்து தமிழக இளைஞர்களை மாற்ற பொன்னான நாளான ஏப்ரல் 23-ல்…
கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுயானை ஒருவர் மீது தாக்க முயன்ற சிசிடிவி காட்சி சமூகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது
