குபெர்டினோ, கலிபோர்னியா :
டெக் உலகின் ஜாம்பவனான ஆப்பிள் நிறுவனம் தனது தலைமைப் பொறுப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை ஒரு 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமாக மாற்றிய டிம் குக் , தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவருக்குப் பதிலாக, ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் (Senior Vice President of Hardware Engineering) பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருந்த ஜான் டெர்னஸ் , புதிய CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய மாற்றங்கள்:
பதவி ஏற்பு: ஜான் டெர்னஸ் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக CEO பொறுப்பை ஏற்பார்.
டிம் குக் – புதிய பொறுப்பு: டிம் குக் முழுமையாக விலகாமல், ஆப்பிள் நிர்வாகக் குழுவின் செயல் தலைவராக (Executive Chairman of Apple’s board of directors)தொடருவார். உலக நாடுகளின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தை மற்றும் கொள்கை முடிவுகளில் அவர் கவனம் செலுத்துவார்.
யார் இந்த ஜான் டெர்னஸ்?: 50 வயதான ஜான் டெர்னஸ், 2001-ம் ஆண்டு முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐபோன் , ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற தயாரிப்புகளின் வடிவமைப்பில் இவருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
ஏன் இந்த மாற்றம்?
ஸ்டீவ் ஜாப்ஸிற்குப் பிறகு ஆப்பிளை வெற்றிகரமாக வழிநடத்திய டிம் குக், தற்போது ஒரு சரியான வாரிசை அடையாளம் கண்டுள்ளார். ஜான் டெர்னஸ் ஒரு சிறந்த பொறியாளர் மட்டுமல்லாமல், ஆப்பிளின் ‘டிஎன்ஏ’ தெரிந்தவர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, ஆப்பிள் தற்போது ஏஐ மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி துறைகளில் கவனம் செலுத்தி வரும் சூழலில், இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

