Author: Prime Reporter

நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் மனதை கவர்ந்த விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்ற பெயரும் உண்டு. ஆரம்பத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி, ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்து வந்தார். தற்போது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது, காயமடைந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி பூரண குணமடைய வேண்டும் என சமூகவலைதளங்களில் அவரது ரசிகர்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி காயமடைந்த தகவல் சமூக வலைதளங்களில் மட்டும்பரவி வருவதால் இது எந்தளவு உண்மையென தெரியவில்லை.

Read More

நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது. சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில், இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா சுப்ரமணியன் அவர்கள். அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட. ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை…

Read More

சென்னை நந்தனத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதே உணவகத்தில் பணிபுரிந்த 22 வயது பெண்ணை, கல்லூரி வளாகத்திற்குள் வைத்து குணசேகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், அந்த பெண்ணை இதே சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கண்ணீருடன் கல்லூரியில் பணியாற்றும் காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்ததைத் தொடர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, குணசேகரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, நந்தனம் பகுதியில் நிகழ்ந்த கடுமையான குற்றச் சம்பவங்கள் தொடர்பான அதிர்வுகள் இன்னும்…

Read More

நடிகர் அஜித் குமார், திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங் மீது கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக, அண்மைக் காலமாக பல்வேறு சர்வதேச ரேஸிங் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஸ்பெயின் மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அபுதாபி ரேஸிங் களத்தில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Read More

கடந்த 2011ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியானது மங்காத்தா. அஜித், அர்ஜூன், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜித் கேரியரில் மிகச்சிறந்த படமாகவும். முக்கிய திருப்புமுனையாகவும் இந்த படம் அமைந்திருந்தது. இதையடுத்த மங்காத்தா படம் கடந்த 23ஆம் தேதி 15 வருடங்களுக்கு பின் ரீ ரிலீசானது… படத்தை மிகவும் எதிர்பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ரீ ரிலீசில் மங்காத்தா படம் புதிய சாதனை படைத்துள்ளது. 6 நாட்களில் இதுவரை படம் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

Read More

ஜனநாயகன் பட பிரச்சனையின் போது, விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுத்தது. ராகுல் காந்தி குரல் எழுப்பியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சில முக்கிய தலைவர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி அமையும் சூழல் உருவானது. ஆனால் இன்று வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இது குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்…

Read More

தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் ஒரு வாரத்தில் இணையும் என நேற்றுதான் கூறியிருந்தேன். அதற்கு இன்னும் ஏழு நாட்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை டப்பா எஞ்சின் என முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின்பு எது மக்கரான என்ஜின் எது டப்பா எஞ்சின் எது வந்தே பாரத் இன்ஜின் என்பது அனைவருக்கும் தெரியும். திரைப்பட தணிக்கை குழு சுதந்திரமான அமைப்பு. ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு மட்டும் தான் அதற்கு ஏன் தணிக்கை சான்றிதழ் தரவில்லை என்பது தெரியும். அந்த படத்திற்கு மட்டும் ஏன் அனைவரும் விளம்பரம் தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. த.வெ.க ஆட்சி அமைத்தால் ஊழலற்ற ஆட்சியை தரும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு உங்களுக்கே இந்த கேள்வி நகைச்சுவையாக இல்லையா என பதில் அளித்தார்

Read More

நடிகரும் தவெக தலைவருமான விஜய் குறித்து அமைச்சர் கேஎன் நேரு சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, ஒரு போதும் அழுத்தத்திற்கு பயப்பட மாட்டேன் என கூறிய விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றார். தன்னுடைய படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது நடிகர் விஜய் அவருடைய தந்தையை அழைத்து கொண்டு ஜெயலலிதாவிடம் கைக்கட்டி நின்றனர். இப்போது வீரவசனம் பேசுகின்றனர் என கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து தவெக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? ஒரு படம் வெளிவருவதில் வரும் இடையூறை அதிகாரத்திலிருக்கிற முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண கேட்டால் அது என்ன பஞ்சமா? பாதகமா? தவெக வை பற்றி கவலைப்படுகின்ற நேரு தன்னுடைய துறையில் 2000கோடிக்கு…

Read More

ஜனநாயகன் படத்தை வெளியீடு செய்வதில் மீண்டும் புதிய சிக்கல் எழுந்துள்ளது. கடந்த பொங்கலுக்கு விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. தணிக்கை சான்று வாங்க கோரி தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் முறையிட, வழக்கை விசாரித்த தனி நீதிபதி உடடினயாக தணிக்கை சான்று வழங்க உத்தவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல்முறையீடு செய்ய, தலைமை நீதிபதி எம்எம் ஸ்ரீவஸ்தவா மற்றம் நீதிபதி அருள் முருகன் அமர்வு விசாரித்து, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தார். மேலும் தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் அளிக்கவில்லை, படத்தில் சில காட்சிகள் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சென்சார் போர்டு தலைவர் படத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மீண்டும் வழக்கை தனி நீதிபதி ஆஷாவே விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணையில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு…

Read More

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய எரிசக்தி வார விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாடிய பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகவும், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என கூறியுள்ளார். அதாவது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களின் வரி விகிதம் கணிசமாக குறையும் என்பதால் விலையும் கணிசமாக குறைய உள்ளது. முக்கியமாக பல சொகுசு கார்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யும் போது 110% வரை வரி விதிக்கப்படும். இதனால் காரின் விலை இரண்டு மடங்காகிறது. உதாரணத்திற்கு ஒரு கார், ஒரு கோடி ரூபாய் என்றால் விலை ரூ2 கோடி ஆகும். இந்தநிலையில் வரி குறைப்பதன் மூலம் 110%ல்…

Read More