Author: Prime Reporter
கோவையில் பச்சிளம் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த பெண்களிடமிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு நல மையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும், குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் விசாரணை நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தைச் சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது அரசு தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டன. மாணவி கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், குற்றவாளியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என…
கோவை கிணத்துக்கடவு முருகன் கோவில் மலையில் மாணவர்கள் சம்பவம் வீடியோ வைரலாகி சமூகத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி விசாரணை கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் குடும்பத்துக்கு அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சி வயப்பட்டு ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திக்கு மகுடம் சூட்டுவோம்; தமிழை மட்டம் தட்டுவோம் என வஞ்சக நோக்குடன் ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் சொல்லிவருவதும் – என தொடர்ச்சியாக இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைத்து வருகிறது பாசிச பாஜக. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்காமல் ஒரே மொழியை திணிப்பது அரசியல் மற்றும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள…
மருந்து பாட்டில்களை திறந்த பிறகு எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்? பாராசிட்டமல், இருமல் சிரப் மற்றும் சொட்டு மருந்துகள் குறித்த மருத்துவரின் முக்கிய அறிவுரைகள் இதோ.
13 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய மர்மபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிராவின் அகில்யநகர் மாவட்டத்தில் உள்ள வட்காவ்ன் பான் கிராமத்தில் 13 வயதான 6 ஆம் வகுப்பு சிறுமி மீது கடந்த கட்டாயம் ஒரு அசிட் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. நேற்று மதிய நேரத்தில், பள்ளி முடிந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி, சைக்கிளில் பயணிக்கையில், ஒரு இரு சக்கர வாகன ஓட்டுநர் அவளை நிறுத்தி, வழி கேட்கும் பாசாங்கு செய்தார். சிறுமி தனது சைக்கிளை நிறுத்திய உடனே, அந்த நபர் திடீரென அவளின் முகத்தில் ஆசிட் திரவத்தை வீசிவிட்டார். இச்சம்பவத்தில், அவளின் முகம் தீக்காயங்களுடன் பலமுறை எரிந்தது, மற்றும் சிறுமி கடும் வலியுடன் அலறினாள். அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, அந்தச் சிறுமி தனது தைரியத்தை எடுத்து, அசத்தலாக தனது பள்ளி செல்ல ஓடினாள். பள்ளியில்…
நேபாள சுற்றுலா விபத்தில் உயிரிழந்த பொள்ளாச்சி தம்பதியர் உட்பட மூவர் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சூலூர் அருகே தேர்தல் விதிமுறை மீறி பதுக்கி வைத்த சில்வர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
ஆரோக்கியமான கோதுமை தோசை மற்றும் காரசாரமான தக்காளி சட்னி செய்வது எப்படி என்பதை எளிமையாக வீட்டிலேயே கற்றுக்கொள்ளுங்கள் இன்று.
சட்டமன்ற தேர்தலுக்காக திரள் நிதியை மக்களிடம்பெறப் பேவாதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும். இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய…
