Author: Prime Reporter

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள், பக்தர்கள், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில், சிலர் காயம் அடைந்தனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், காயம் அடைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனை கண்டித்து கோவை காந்திபுரம் சிக்னல் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல் துறையினர்…

Read More

கோவை லீ மெரிடியன் விடுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர்,தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பலவீனமாகவே சென்று கொண்டிருக்கிறது என்றும் அதனை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். சில MP, MLA களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் அதே வேளையில் ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளி விடுவார்களா என்றும் கேள்வி எழுப்பினார். கூட்டணி தொடர்பாக தலைமை தான் முடிவு எடுக்கும் எனவும் எங்களுடையது ஜனநாயக கட்சி என்பதால் யார் என்ன கோரிக்கை வேண்டுமானாலும் வைக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும் நான் சினிமாவில் இல்லை அதை தெளிவுப் படுத்திக் கொள்கிறேன் என்றும் தவெக தலைவர் விஜயை சந்தித்தேன் அதை தாண்டி எதுவும் கூற விரும்பவில்லை என கூறினார். ,விஜயை சந்தித்தது போல டெல்லியில் பலரையும் நான் சந்திக்கிறேன் பிரவீன் சக்கரவர்த்திக்கு காங்கிரஸ் கட்சியில் இருப்பது மட்டும்தான் அடையாளமா..? வேறு அடையாளங்களே இல்லையா… ? தனிப்பட்ட…

Read More

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து வஞ்சித்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலகட்டத்தில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதே என அவர் தெரிவித்ததுடன், அதனை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தன் மீது அவதூறு பரப்புவதாகக் கூறி மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜாய் கிரிசில்டா அவதூறு பரப்புவதற்கு தடை விதிக்கக் கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனுவை நிராகரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ் அவருடைய மனைவி ஷைனி, கண்ணன், அனூப், வீரமணி உள்ளிட்டு 5 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. சதி திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கேரளா சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட ரூபேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதே போல் சைனி, அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி விஜயா வழக்கு விசாரணை அடுத்த மாதம் மூன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Read More

சில்லறை பணம் வாங்க முடியாது, டிஜிட்டல் முறையில் தான் பணம் செலுத்த வேண்டும் என அடாவடி செய்த கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கேண்டின் நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் ரங்கநாதர் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வங்கி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத சுமார் 1,200 க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சென்று இருந்தனர்.தேர்வு எழுத வந்தவர்கள் அங்கு உள்ள சாய் கேண்டினில் டீ மற்றும் உணவுப் பொருள்களை வாங்கி உள்ளனர். அதற்கான தொகையை பணமாக வழங்கிய போது கேண்டின் நிர்வாகத்தினர் அதனை வாங்க மறுத்து உள்ளனர். மேலும் அந்த கேண்டின் நிர்வாகத்தினர் இந்த வளாகத்தில் ஜிபி மட்டும் செலுத்த முடியும் ரொக்க பணத்தை ஏற்க மாட்டோம், என்றும் கூறி உள்ளனர்.பணம் மட்டுமே வைத்து இருந்த தேர்வர்கள்…

Read More

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். “‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட இவ்வளவு இழுத்தடிப்பு செய்யும் அளவிற்கு அந்த படத்தில் ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார். மேலும், “‘ஜனநாயகன்’ படத்தின் தெலுங்கு பதிப்பை நான் பார்த்தேன். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ, நெருக்கடி கொடுக்கும் அளவிலோ அந்த படத்தில் ஒன்றும் இல்லை” என்றும் கூறினார். தமிழ் மொழி தொடர்பாக சீமானை குறித்து சுபவீர பாண்டியன் தெரிவித்த கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “உயிரோடு இல்லாதவர்களை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று பதிலளித்தார். திருப்பரங்குன்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “முதலில் உயிரோடு இருப்பவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டும். அதன் பிறகு திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு விளக்கேற்றுவது பற்றி பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Read More

காலை உணவுத் திட்டத்தைப் போலவே, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திலும் திமுக அரசு மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டது. அக்காலகட்டத்தில் லேப்டாப் என்பது ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த நிலையில், இந்தத் திட்டம் உயர்கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும், தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு இது முக்கிய காரணமாக இருந்ததாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த நான்கரை ஆண்டுகளாக இலவச லேப்டாப் வழங்கவில்லை என்றும், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அத்தியாவசியமாக உள்ள நிலையில், இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டு…

Read More

விஜய் நடிப்பில் ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ப்ரீ புக்கிங்கில் இதுவரை ஜனநாயகன் படம் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் இது அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை பார்த்த முக்கிய புள்ளிகள் முதல் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். படத்தை பார்த்த அவர்கள், விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இது சிறந்த படம் என்றும், ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளதாகவும், 3 மணி நேரம் பட நீளம் இருந்தாலும், போர் அடிக்கவில்லை, விறுவிறுப்பாக கதை நகர்வதாக கூறியுள்ளனர்.

Read More

கோவை மாநகர் பீளமேடு பகுதியில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் காரை வேகமாக தாறுமாறாக ஓடியுள்ளார். காரை ஓட்டிய நபர் இருசக்கர வாகனங்கள் மீதும் பக்கவாட்டு சுவர்கள் மீதும் மோதியதாக தெரிகிறது. எனவே சாலையில் சென்ற இதர வாகன ஓட்டிகள் காரை சுற்றி வளைத்து வாலிபரை தாக்கினர். மேலும் காரின் கண்ணாடிகளையும் உடைத்து, அந்த வாலிபரை வாகனத்தில் இருந்து இறங்க செய்தனர். அப்போது அந்த வாலிபர் காரின் மீது ஏறிக்கொண்டு கீழே வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுப்பட்டுள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அவரை பிடித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காரையும் பறிமுதல் செய்து பீளமேடு காவல் நிலையம் கொண்டு சென்றனர். காரை ஓட்டி வந்த இளைஞன் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்த நிலையில், அவர் மது போதையில் இருக்கிறாரா அல்லது வேறு ஏதாவது போதை பொருளை பயன்படுத்தி இருக்கிறாரா என்று மருத்துமனைக்கு…

Read More

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்து நீதிபதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு, திமுக அரசு மேல்முறையீடு செய்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது இது குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் மேல்முறையீட்டையும், அது தொடர்பான பிற மனுக்களையும், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டில் ஒரே ஒரு நாள், கோவில் பிரதிநிதிகளும், முருக பக்தர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றினால், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்ற திமுக அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அப்படி ஏதேனும் சட்டம் ஒழுங்கு…

Read More