எல்லாருக்குமே செழிப்பான வாழ்க்கை தான் வாழ விருப்பம். ஆனால், அதற்கு இரவு பகலும் அயராது உழைத்து வருகிறோம். ஆனால், என்னதான் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சம்பாதித்தாலும், நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளின்படியும் வீட்டில் உள்ள பொருட்கள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வகையில் சரியான இடத்தில் சரியான திசையில் இல்லாவிட்டால், வந்த வேகத்தில் பணம் கையில் நிற்காமல் கரையும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், நிறைய பேர் தங்கள் வீடுகளில் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பொருட்களை வாங்கி வைப்பார்கள். அதில், ஒன்றுதான் ஆந்தையின் சிலை. இந்து மதத்தில் மட்டுமின்றி வாஸ்து சாஸ்திரத்திலும், ஆந்தை ஒரு சிறப்பான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அதுவும் ஆந்தை செல்வத்தின் தெய்வமாக லக்ஷ்மி தேவியின் வாகனம்.
குழந்தை பாக்கியம் வேண்டுமா?தலையாட்டி கணபதியின் மகிமையும்.. வழிபாடு முறைகளும்..!

இந்த ஆந்தையை குறித்த பல நம்பிக்கைகள் நம் சாஸ்திரத்தில் உள்ளன. பொதுவாக, சாஸ்திரங்களில் கருதப்பட்டாலும், பல இடங்களில் அது அமங்கலமாகவே விளைவுகளை ஏற்படுத்துகிறது. வாஸ்து சாஸ்திரத்தில் ஒருவர் ஆந்தையை கண்டால், அந்த நபருக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும் என்றும், அவர் பெரும் செல்வந்தராக போகிறார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஆந்தையை தொட்டால், அவர் நோயிலிருந்து குணமடைவதாகவும் நம்பப்படுகிறது. அது மட்டும் இன்றி ஆந்தையை ஒருவர் பகல் வேளையில் கண்டால், மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைத்தது என்றே எடுத்துக் கொள்ளலாம். வாழ்வில் எதிர்பாராத ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.

முக்கியமாக ஆந்தையை ஒருவர் வலது பக்கத்தில் பார்ப்பது அபசகுனமாகும். அதுவே இடது பக்கத்தில் பார்த்தால் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இப்படி ஆந்தை குறித்து பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதால், இந்த ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாமா? என்ற கேள்விகளும் பலருக்கும் எழுகிறது. இப்போது ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாமா? மற்றும் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆம், நிச்சயமாக ஆந்தை சிலையை வீட்டில் வைக்கலாம். ஆந்தை மிகவும் புத்திசாலிதானமான பறவையாக கருதப்படுகிறது. இந்த சிலையை வீட்டில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. முக்கியமாக, இது வீட்டில் உள்ளவர்களின் கவனத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், அதற்கு அந்த சிலையை வீட்டில் சரியான இடத்தில் சரியான இடத்தில் வைக்க வேண்டும்.

இதன் மூலம் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கலாம். வாஸ்துபடி ஆந்தை சிலையை வீட்டின் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதுவும் இந்த சிலையை வீட்டின் எந்த அரையிலும் வைக்கலாம். இருப்பினும் படுக்கை அறையில் வைப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

ஆந்தை சிலையை வீட்டில் வைத்திருப்பதால், அது வீட்டில் சாதகமான சூழலை உருவாக்கவும், கண் திருஷ்டியினால் சந்திக்கும் தீய விளைவுகளை தடுக்கும் வாழ்வில் மகிழ்ச்சியை மற்றும் செல்வத்தை அதிகரிக்கவும் உதவுவதாக கருதப்படுகிறது. இதன் மூலம் அது வீட்டிற்கு சந்தோசத்தை கொண்டு வரும் ஒருவேளை சிலையை வைக்காவிட்டால் ஃபோட்டோவை கூட வீட்டில் வைக்கலாம்.

