வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். திரை துறையில் முன்னணி நடிகையாக பார்க்கப்படும் த்ரிஷாவை பொறுத்தவரை அவருக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அவரது நட்பு லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
விஜய்யின் ‘சிங்கப்பெண்’ படை.. 12 மண்டலங்களில் அதிரடி ரோந்து..!
இந்நிலையில், பத்திரிக்கையாளர் பிஸ்மி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, அவர் இது குறித்து கூறுகையில், சில காலத்துக்கு முன்பு சூர்யா என்பவர் எல்லா youtube சேனல்களிலும் நான் த்ரிஷாவின் கணவர் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.
youtube சேனல்களும் அது உண்மையா இல்லை பொய்யா என்பதை தெரியாமல் ஒளிபரப்பினார்கள். நான் அந்த சமயத்தில், திரிஷாவின் தாயை தொடர்பு கொண்டு உங்கள் மகளின் கணவர் என சூர்யா சொல்கிறார். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே என கேட்டேன். நாங்கள் வழக்கு போட்டு அவரை பெரிய ஆளாக்க விரும்பவில்லை என சொல்லிவிட்டார். இதுதான் நடிகைகளின் பலவீனம் அதனால்தான் எல்லோரும் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

