முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, இந்த அடிப்படையில் முதல் பெண் ஐஜீயாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த சிங்கப்பெண் படையில் ஒரு போலீஸ் சூப்பிரண்ட் இரண்டு துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சிங்கப்பெண் அதிரடி படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு நீல நிற சட்டை காக்கிநிற பேண்ட் என சிறப்பு சீருடை வழங்கப்பட்டு இருக்கிறது.
9 மாவட்டங்களுக்கு அலர்ட்.. மாறிப்போன கிளைமேட்.. கொட்டப்போகும் இடி மின்னல் மழை..!
அத்துடன் கருப்பு நிற தொப்பியும் கருப்பு நிற ஷூவும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அதிரடி படையை கடந்த 29ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் முதலமைச்சர் விஜய் மாலை ஐந்து மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்திருந்தார்.
சென்னையில் நாளை முதல் 12 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ரோந்து பணியில் ஈடுபட உள்ளார்கள். இதற்காக, போலீஸ் கமிஷனர் அமுல்ராஜ் சென்னை மாநகர் முழுவதும் காவல் மாவட்டம் வாரியாக பெண் காவலர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இந்த உத்தரவின் படி ஒவ்வொரு மண்டலம் வாரியாக மேற்பார்வை அதிகாரிகளாக உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

