தீராத கடன் தொல்லை வாழ்க்கையில் இருந்து நீங்கவும் திருமண தடை அல்லது குடும்பத்தில் நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகளால் தவிப்பவர்களுக்கு பித்ரு தோஷத்தின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. ஆன்மீகப் பெரியவர்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்காத பட்சத்தில் நாம் எவ்வளவு உழைத்தாலும் அதன் பலன் முழுமையாக கிடைப்பதில்லை.
இந்த தடைகளை நீக்கி பக்தி பரிபூரண அருளை பெற கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்புதான் சனி அமாவாசை தினமாகும். சனிபகவானின் ஆதிக்கம் முன்னோர்களின் வழிபாடு இணையும் இந்த நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் இரட்டிப்பு பலனை தரக்கூடியவை.

குறிப்பாக, உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்களுக்கும் பித்ரு சாபத்தால் அவதிப்படுபவர்களுக்கும். இந்த நாள் ஒரு வார பிரசாதமாக கருதப்படுகிறது. முறையான வழிபாட்டின் மூலம் நம் முன்னோர்களை குளிர் செய்வது அவர்களின் ஆசியை பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் நாம் விளக்கமாக பார்க்கலாம்.
சனி அமாவாசை சனிக்கிழமையும் குறிப்பாக, அம்மாவாசையும் இணைந்து வரும் நாளை சனி அமாவாசை என்று கூறுவார்கள். இது சனிபகவானின் அருளையும் நம் முன்னோர்களின் ஆசியையும் ஒரே நேரத்தில் பெறக்கூடிய மிக அபூர்வமான நாளாக கருதப்படுகிறது.

ஜோதிட ரீதியாக சனிபகவான் கரும வினைகளுக்கு அதிபதி அதே போல் அமாவாசை என்பது பித்ருகளுக்கு உரிய நாள். இந்த நாளில், செய்யப்படும் தர்ப்பணம் ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கி பித்துரு சாபத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கொடுக்கும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.
முன்னோர்களின் வடிவமாகவும் கருதப்படுகிறது. வீட்டின் தெற்கு திசையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். ஏழை எளியவர்களுக்கு கருப்பு நிற ஆடைகள் குடை அல்லது செருப்பு போன்றவற்றை தானமாக வழங்குவது சனிபகவானின் கோபத்தை தணிக்கும். அன்றைய தினம் அமாவாசை உணவுகளை தவிர்த்து முழுமையான பக்தி மற்றும் தூய்மையுடன் விரதம் இருப்பது அவசியம்.

மாலையில் அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வலம் வருவது பித்ரு தோஷங்களை வேரோடு நீக்க உதவும். இந்த நாளில், ஓம் சம் சனிச்சராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சனிதோஷத்தின் வீரியத்தையும் குறைக்கும். இந்த வழிபாட்டை செய்து வர திருமண தடை நீக்குதல் செல்வ செழிப்பு குடும்ப ஒற்றுமை ஆரோக்கியம் மேம்படும்.

