ஆடி மாதம் 18-ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு (Aadi Perukku) நன்னாளில் காவிரி மற்றும் பிற நதிக்கரைகளில் மக்கள் கூடி வழிபாடுகள் நடத்துவது வழக்கம். சுமங்கலிப் பெண்கள் தங்களது குடும்பத்தின் மங்கலத்தைக் குறிக்கும் வகையில் மஞ்சள் கயிற்றாலான தாலிச் சரடைப் புதுப்பித்து மாற்றிக் கொள்ளும் சுபநேரம் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆற்றங்கரைகளில் புதிய மஞ்சள் கயிற்றில் குங்குமம் வைத்து, காவிரியைப் போற்றி வழிபட்டுப் பெரியவர்களின் ஆசியுடன் தாலிச் சரட மாற்றிக்கொள்வது குடும்பத்திற்கு ஐஸ்வர்யத்தைத் தரும் என்பது ஐதீகம். ஆடிப் பெருக்கு நன்னாளில் சுமங்கலிப் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றை மாற்றிக் கொள்வது, கணவரின் ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பெருகும் என்றும், தம்பதியிடையே ஒற்றுமை ஓங்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆண்களுக்கான ஸ்கின் கேர்.. கரும்புள்ளி மற்றும் கருமையை போக்கும் அற்புதம்..!
புது மஞ்சள் கயிறு, காப்பரிசி, பூ, பழம், தேங்காய், மற்றும் காதோலை கருகுமணி ஆகியவற்றைத் தட்டில் வைத்து நதிக்கரையில் அல்லது வீட்டில் அம்மனை நினைத்து வழிபட வேண்டும். கயிறு மாற்றிய பின் குடும்பத்தில் உள்ள முதிய மற்றும் சுமங்கலிப் பெண்களின் காலில் விழுந்து ஆசி பெறுவது மங்கலத்தை மேலும் பெருக்குமாம்.
தாலி சரடு மாற்ற உகந்த நேரங்கள்
காலை நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை மிகச் சிறந்த நல்ல நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகு காலம் குறித்த விளக்கம்: காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ராகு காலம் இருந்தாலும், குறிப்பிடப்பட்டுள்ள அந்த நல்ல நேரத்தில் சரடு மாற்றினால் எந்தத் பிரச்சினையும் இல்லை.
மாலை நேரம்: ஒருவேளை ராகு காலத்தைப் பற்றித் தயக்கம் அல்லது நெருடல் இருந்தால், மாலையில் 3.15 மணி முதல் 4.15 மணி வரை கொடுக்கப்பட்டுள்ள நல்ல நேரத்தில் தாலிச் சரடை மாற்றிக் கொள்ளலாம்.

