ஒரு செயலை செய்யும் முன் முதல் கடவுளான விநாயகரை வணங்குவது நம் தமிழர் மரபு விநாயகரை வணங்கினால், வெற்றி உறுதி என்ற நம்பிக்கை பலரிடையே உள்ளது. தலையாட்டி விநாயகர் ஆலயம் ஆத்தூர் பகுதியில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் பக்தர்களிடையே தனித்துவமான வரலாற்றையும், அதிசயத்தையும், பெறுகிறது.
ஒரு காலத்தில் பல நதிகள் ஓடியதால் ‘ஆற்றூர்’ என அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் பெயர் மருவி ‘ஆத்தூர்’ ஆனதாக கூறப்படுகிறது. புராணக் கதைகளின் படி வசிஷ்ட முனிவர் இப்பகுதியில் தவம் செய்து பல இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தாராம். அவரின் தவப்பலனை சிவபெருமான் ஜோதி வடிவில் வந்து அருள் காட்டியதாகவும் பின்னர் அந்த லிங்கம் மண்ணில் புதைந்ததாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகள் கழித்து சிவ பக்தரான ஒரு மன்னனின் கனவில் இறைவன் தோன்றி நான் இத்தளத்தில் புதைந்திருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்பு என கூறினாராம். மன்னனின் கனவில் தோன்றிய சிவலிங்கமும் புதையலும் கிடைத்ததாம். அந்த செல்வத்தை கொண்டு கோவில் கட்ட தொடங்கிய அந்த மன்னர், முதலில் விநாயகரிடம் அனுமதி பெற்று பணியை ஆரம்பித்தாராம்.

கோவில் கட்டுமானம் வெற்றிகரமாக முடிந்தபின் நன்றாக கட்டியுள்ளேனா என்று மன்னன் கேட்டபோது விநாயகர் ‘ஆம்’ என்று தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. காவல் கணபதி எனப் போற்றப்படும் இந்த தலையாட்டி விநாயகர் வேண்டிய காரியங்கள் வெற்றியடையும் வரை நம்முடன் இருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.

மனக் குழப்பமா?.. எதிர்மறை எண்ணங்களை விரட்டி புத்துணர்ச்சி அளிக்கும் ‘அதிசய மாலை’..!
பக்தர்களின் உறுதியான நம்பிக்கை திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கிரக தோஷங்கள் விலக, பலரும் இத்தளத்திற்கு வந்து விருப்பமான பூஜைகளை செய்து தலையாட்டி விநாயகரை தரிசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை இங்கு தலையாட்டி விநாயகரை தரிசனம் செய்யலாம். ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலே அமைந்துள்ள இந்த ஆலயம் பக்தர்களை தலையாட்டி வரவேற்க காத்திருக்கிறது.
வழிபாட்டு முறைகள் மற்றும் பலன்கள்
திருமணத் தடை நீங்க
திருமண வயதை எட்டியும் வரன் அமையாமல் தள்ளிப் போகும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், இத்தலத்திற்கு வந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, மனதார வேண்டிக்கொண்டால் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
குழந்தைப் பாக்கியம்
நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாத தம்பதிகள், சங்கடஹர சதுர்த்தி அல்லது சாதாரண நாட்களில் இங்கு வந்து விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம்.
வெற்றி உறுதி
புதிய தொழில் தொடங்குபவர்கள் அல்லது ஒரு முக்கியமான காரியத்தைத் தொடங்குபவர்கள், இவரை ‘காவல் கணபதி’யாக நினைத்து வேண்டிக்கொண்டால், அந்தக் காரியம் முடியும் வரை அவர் துணையிருப்பார் என்று சொல்லப்படுகிறது.
தோஷ நிவர்த்தி
கிரக தோஷங்கள், குறிப்பாக ராகு-கேது தோஷங்கள் உள்ளவர்கள் இக்கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
குறிப்பு
விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில் இக்கோயிலில் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமர்சையாக நடைபெறும்.

