எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ள திவ்யா சத்யராஜ், “எந்தத் தப்பும் செய்யாத ஒருவரைக் கைது செய்வது அநியாயம், அக்கிரமம் மற்றும் அராஜகம்” என்று கூறியுள்ளார்.
மேலும், “பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்; அதை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது” என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நான் யாரையும் தவறாகப் பேசவில்லை.
‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!
நான் பேசாத விஷயங்களை ‘கட்-காபி-பேஸ்ட்’ செய்து திட்டமிட்டுத் தவறாகப் பரப்பியுள்ளனர். காவிரி விவகாரத்தை நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தத் திசை திருப்பும் முயற்சி நடந்துள்ளது. தீவிரவாதியைப் போல என்னை 400 கி.மீ தூரம் அழைத்துச் சென்று செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்; இந்த அரசு பொய் வழக்கு போட்டு பயமுறுத்தப் பார்க்கிறது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

