பொதுவாக சிலருக்கு பல்லி பூச்சிகள் போன்றவற்றை பார்த்தாலே பயம். இது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும், குறிப்பாக பெண்கள் பலர் பல்லியை விரட்டும் வரை அச்சத்துடனே இருப்பார்கள். முன்னதாக, நமது வீடுகளில் நம்முடன் வாழும் உயிரினங்களில் ஒன்றாக பல்லியும் இருந்து வருகிறது.
சுவர்களில் ஓடிக் கொண்டிருக்கும் பள்ளிகள் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மனிதர்களின் மீதும் விழுவதுண்டு. பழங்கால ஜோதிட நம்பிக்கைகளின் படி பல்லி என்பது கேது கிரகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால், பல்லி கத்துவது உடலில் விழுவது போன்ற நிகழ்வுகளுக்கு தனிப்பட்ட பலன்கள் ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவானதே கௌரி சாஸ்திரம். எந்த இடத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஏழு தலைமுறை பாவங்களைப் போக்கும் தர்ப்பணம்.. பரிபூரண ஆசியைப் பெறும் ரகசியம்..!
பல்லி தலையில் விழுந்தால்
ஒருவரின் தலையின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் மனக்கவலை அல்லது கலக்கம் ஏற்படும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. வலது பகுதியில் விழுந்தால் துன்பகரமான சம்பவங்கள் நிகழலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. ஆனால், தலைமுடியில் மட்டும் விழுந்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பல்லி முகத்தில் விழுந்தால்
நெற்றியில் பல்லி விழுவது மிகவும் சுகமானதாக கருதப்படுகிறது. இது செல்வ வளம் புகழும் அதிகரிக்கும். அறிகுறியாக, பார்க்கப்பட்டு வருகிறது. புருவத்தில் விழுந்தால் செல்வந்தர்களின் ஆதரவு கிடைக்கும். கன்னம் அல்லது கண்களில் விழுந்தால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முகத்தில், விழுந்தால் உறவினர்களின் வருகை ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.

காதில் பல்லி விழுந்தால்
இடது காதில் விழுந்தால் லாபம் கிடைக்கும் வலது காதில் விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. தோல் மற்றும் கைகளில் பல்லி விழுந்தால் இடது அல்லது வலது தோளில் பல்லி விழுந்தால் வெற்றி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும். இடது கையில், விழுந்தால் மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் ஏற்படும். வலது கையில் விழுந்தால் சில சிரமங்கள் ஏற்படலாம் என்றும், மணிக்கட்டில் விழுந்தால் உடல்நலத்தில் கவனம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
பல்லி மார்பில் விழுந்தால்
மார்பு பகுதியில் பல்லி விழுவது லாபம் சுப நிகழ்வுகள் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை குறிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பல்லி காலில் விழுந்தால் கால் பாதத்தில் பல்லி விழுந்தால் விரைவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு அல்லது துயரப் பயண யோகம் கூட அமையலாம்.
பிறப்புறுப்பு விழுந்தால்
பிறப்புறுப்பு பகுதியில் பல்லி விழுந்தால் பணக்கஷ்டம் அல்லது மன வருத்தம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், எழுந்தால் பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொப்புளில் விழுந்தால்
பல்லி விழுவதால் தொப்புள் பகுதியில் ஆடைகள் ஆபரணங்கள் பரிசுகள் கிடைக்கும் யோகம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. தொடையில், விழுந்தால் பெற்றோருக்கு மன வருத்தம் அல்லது குடும்பத்தில் சிறிய கவலைகள் ஏற்படும் எனவும் சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது.

