பொதுவாக கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். நம்முடைய வளர்ச்சியை கண்டு மற்றவர்கள் வைக்கும் கண் திருஷ்டி பொறாமை போன்றவற்றால் வீட்டில் தேவையில்லாத சண்டைகள், தொழிலில் முடக்கம் மற்றும் உடல்நல குறைபாடுகள் ஏற்படலாம்.
ஆன்மீக ரீதியாக இப்படிப்பட்ட கண் திருஷ்டிகளை நம்முடைய வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து ஐந்து நிமிடத்தில் எப்படி நீக்குவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை மற்றும் கற்பூரம்

உடல் சூடு முதல் செவ்வாய் தோஷம் வரை அத்தனையுமே கியூர்.. நெகட்டிவ் எனர்ஜியை விரட்டும் ஆன்மீக ஆயுதம்..!
கண் திருஷ்டியை வேரோடு அழிக்கும் சக்தி ஆன்மீகத்தில் எலுமிச்சை பழத்திற்கு இருக்கிறது. இதற்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியதில்லை. நன்றாக பழுத்த ஒரு எலுமிச்சை பழம், சிறிதளவு குங்குமம் மற்றும் ஒரு கற்பூரம், எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி இரண்டு பகுதிகளிலும் குங்குமத்தை தடவி மாலை நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கிழக்கு நோக்கி நிற்க வைத்து குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் அந்த குங்குமம் தடவிய எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக்கொண்டு அனைவரையும் சேர்த்து வலப்புறமாக மூன்று முறையும் இடப்புறமாக மூன்று முறையும் சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். இதனை தொடர்ந்து, வாசலுக்கு வெளியே சென்று அந்த பழத்தின் மீது கற்பூரத்தை பற்றவைத்து திருஷ்டி கழித்துவிட்டு பழத்தை சாலையின் இருபுறமும் தூக்கி எறிந்து விட்டால் கண் திருஷ்டி பறந்து விடும்.
கடுகு மற்றும் கல்லுப்பு பரிகாரம்

வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைப்பாடு ஏற்படும் போது அழுது கொண்டே இருப்பார்கள். இப்படி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டு நிமிட பரிகாரம் நிச்சயமாக பலன் தரும். உங்கள் கைகளில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மற்றும் கடுகு ஆகியவற்றை வாசற்படிக்கு உள்ளே குழந்தையை ஆகியவற்றை எடுத்து குழந்தையை வாசற்படி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தையை வாசற்படிக்கு உள்ளே அமர வைத்து தலையை மூன்று முறை சுற்றி வீட்டின் வாசலுக்கு வெளியே கொண்டு சென்று தீயில் போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சும் சக்தி கல்லுப்புக்கு அதிகம் இருப்பதால் திஷ்டி உடனடியாக நீங்கும் .
வீட்டு வாசலில் செய்ய வேண்டிய பரிகாரம்

குடும்பமும் ஒட்டுமொத்தமாக திஷ்டியில் இருந்து தப்பிக்க வீட்டின் நிலை வாசல் படியின் இருபுறம் வாரத்திற்கு ஒருமுறை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் குங்குமம் தடவி எலுமிச்சை பழத்தை வைக்கலாம். மேலும், வாசலின் மேல் பகுதியில் கற்றாழை அல்லது படிகாரத்தை கட்டி தொங்கவிடுவதன் மூலம் வீட்டிற்குள் நுழையும் தீய சக்திகள் வாசலிலேயே தடுக்கப்படுகிறது. இந்த வழிமுறைகள் அனைத்தும் காலம் காலமாக நமது மூதாதையர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றி வரும் எளிய பாரம்பரிய பரிகாரங்களாகும். இவற்றை செய்வதன் மூலம் நேர்மறை எண்ணங்களும் வீட்டில் சுபிட்சமும் உண்டாகும் என்பது ஆன்மீக நம்பிக்கை.

