சம்மர் வந்துட்டாலே உடல்ல மட்டும் இல்ல சருமத்திலும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுது. இந்த சரும பிரச்சனைகளை தவிர்க்கணும் அப்படின்னா வெளிய வெயில்ல போகும் போது சருமத்திற்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கணும். சருமத்துக்கு போதுமான பராமரிப்பு கொடுக்கணும்.

மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!
இதை தவறாமல் செஞ்சுட்டு வந்தாலே சருமத்துல சந்திக்கிற சரும பிரச்சனைகள் தவிர்க்கலாம். இப்படி சரும பராமரிப்புக்கு கிடைக்ககூடிய கடைகளில் விக்கிற பொருட்களை பயன்படுத்தாமல் சீசன் பழங்களை கொண்டு சருமத்தை பராமரித்தால் போதும். அதுவும் கோடை காலத்தில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி. இதற்கு சிறந்த தீர்வா இருக்கும். இந்த தர்பூசணியை பேஸ்பேக் போடும்போது சருமம் பளிச்சுன்னு பிரகாசமாகவும் மாறிடும்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காய், தர்பூசணி சாற்றை ஒன்றாக கலந்து முகத்தில் 15லிருந்து 20 நிமிடம் நல்லா ஊற வைக்கணும். குளிர்ச்சியான நீரை கொண்டு முகத்தை கழுவனும். இந்த பேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தோம்னா வெயில்ல ஏற்படக்கூடிய பாதிப்பு சருமத்துல ஏற்படக்கூடிய கருவளையத்தை தடுக்கலாம்.
தயிர் மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக்

ரெண்டு டீஸ்பூன் தயிர் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தர்பூசணி சாற்றை கலந்து முகத்தில் 15லிருந்து 20 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ புத்துணர்ச்சியுடன் பொலிவோடும் இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை வைத்துக் கொள்ளும்.
பால் மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக்

சில துண்டு தர்பூசணியை எடுத்து அத்துடன் பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதை முகம் கழுத்தில் 15லிருந்து 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையை போக்கி கோடையிலும் சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவுகிறது.
எலுமிச்சை மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக்

தர்பூசணி ஜூஸ் எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தேன் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். முகம் கழுத்து பகுதியில் 15 லிருந்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இது வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு உதவுகிறது.
தர்பூசணி டோனர்

இதுவரை நீங்கள் கெமிக்கல் டோனரை பயன்படுத்தி வந்தால் இந்த தர்பூசணி டோனரை ஒருமுறை பயன்படுத்துங்கள். அதற்கு தர்பூசணியை துண்டு துண்டாக எடுத்துக்கொண்டு அதை முகத்தில் நேரடியாக தடவலாம். 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளிச்சென்று இருப்பதோடு நீரேற்றத்துடன் காணப்படும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

