சம்மர் வந்தாச்சு மாம்பழ சீசனும் தொடங்கியாச்சு ஒவ்வொரு ஆண்டும் சம்மர் சீசனில் மார்க்கெட்டுக்கு சென்றால், பலவிதமான மாழங்களை காணலாம். பார்த்ததும் கண்களை கவரும் நிறத்துடனும், ஆளை மயக்கும் மனதுடன் இருக்கும் மாம்பழத்தை பிடிக்காதவர்களை இருக்க மாட்டார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதால், மாம்பழம் சாப்பிட பலரும் அச்சம் கொள்வதோடு தவிர்த்தும் வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல், தற்போது கெமிக்கல் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்ததால், வயிற்றுவலி உண்டாவதாகவும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இப்படி செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் சுவையின்றி இருப்பதோடு, உடலுக்கு நன்மைகளுக்கு பதிலாக பலவித கேடுகளை விளைவிக்கின்றன.
அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

கோடை காலத்தில் விலை மலிவில் கிடைக்கும் சுவையான மாம்பழத்தை சாப்பிடுவதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
பொதுவாக மாம்பழத்தை எல்லோருமே சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் இருந்து வருகிறது. தற்போது, சூப்பரான சீசன் ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரை கிடைக்க கூடிய ஒரு சீசன் பழம் தான் மாம்பழம்.

இந்த சீசனில் கிடைக்கக்கூடிய மாம்பழத்தை சரிவிகித உணவு முறைகளை பின்பற்றி சக்கரை நோயாளியாக இருந்தாலும், எந்த தவறும் இல்லை. முழு மாம்பழத்தை சாப்பிட்டால், தான் சுகர் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு துண்டு சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது.

மாம்பழத்தில் நிறைய நன்மைகள் இருப்பதால் அதில் இருக்கக்கூடிய கேலடோனின், மேக்னிஃபெரின் என்னும் சக்தி வாய்ந்த இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமையை கொடுக்கிறது. அபாயத்தை தடுக்க நினைத்தால், மாம்பழத்தை கோடையில் தவறாமல் சாப்பிடுங்கள்.
மலச்சிக்கல் நீங்கும்

மாம்பழத்தில் ஏராளமான நார்சத்துகள் நிறைந்து இருப்பதால், இது மலச்சிக்கல் வராமல் தடுக்க பெரிதும் உதவி புரிகிறது. கோடையில் உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமானால், அதிலிருந்து எளிதில் விடுபட ஒரு மாம்பழத்தை சாப்பிடுவது சிறந்தது.
கண் மற்றும் சருமத்திற்கு நல்லது

மாம்பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. கண்களின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. இந்த கொலாஜின் சருமத்தை நெகிழ்ந்து தன்மையுடனும் சுருக்கம் இன்றியும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில், இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் என்னும் வைட்டமின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. கண்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க இது உதவி புரிகிறது.
இதயத்திற்கு நல்லது

இதில், இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. மேக்னிஃபெரின் என்னும் குறிப்பிட்ட பாலிஃபீனால், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும். கொழுப்புகளின் அளவை குறைக்கவும் உதவுகிறது. எனவே கோடையில் மாம்பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள்.
மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
- பொதுவாக மாம்பழத்தை வாங்கும்போது அதனின் தோலின் நிறத்தை பார்ப்பதை விட அதன் வாசனையை கவனிக்க வேண்டும்.
- அதுவும் அதன் தண்டு பகுதியில் நல்ல வாசனை வந்தால், மாம்பழம் நன்கு கனிந்து உள்ளது என்று அர்த்தம்.
- எடையை கவனிக்க வேண்டும். நல்ல பழுத்த மாம்பழமாக இருந்தால் எடையுடன் இருக்கும்.
- மாம்பழத்தின் நிறத்தை பொறுத்தவரை பச்சை மற்றும் மஞ்சள் கலந்து இருக்க வேண்டும். இப்படி இருந்தால், இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்று அர்த்தம்.

- மாம்பழம் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்றால், ஒன்று மாம்பழத்தின் நிறம் நன்கு மஞ்சள் நிறத்தில் பளபளவென்று இருக்கும் மற்றும் அதிக எடையுடன் இருக்காது.
- மேலும், மாம்பழத்திலிருந்து எந்தவித வாசனையும் வராது. இப்படி, வாசனையின்றி எடை குறைவாகவோ மஞ்சள் நிறத்திலும் இருந்தால், அந்த மாம்பழங்களை தவிர்ப்பது நல்லது. அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம்.

