இயல்பாகவே சந்தனம் குளிர்ச்சியான ஒன்றாகும். இதனை முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் ஏற்படக்கூடிய கருமை நிறம் நீங்கி முகம் வெள்ளையாகவும் பொலிவோடு பிரகாசமாகவும் இருக்கும். இக்காலகட்டத்தில், பெண்கள் தங்களின் சரும அளவை பராமரிப்பதற்கு பல கிரீம்களையும் கெமிக்கல்களையும் உபயோகிக்கிறார்கள். இதனால், சீக்கிரமே தோல் வறண்டு அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ‘சந்தனம்’..!

இதிலிருந்து எளிதில் விடுபடுவதற்கு சந்தனம் பெரும் உதவியாக இருக்கிறது. அதிலும், சந்தனத்தை கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், பொலிவோடும் பிரகாசமாகவும் மாறிவிடும். பொதுவாக சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

சந்தனம் இயற்கையாகவே வலுவான மனம் கொண்டதாக அறியப்படுகிறது. இது நிறைய அழகு சாதன தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தன கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை. குறிப்பாக, அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் எதிராக போராடுகிறது. சந்தனத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
சந்தன ஃபேஸ் பேக்குகள்
எண்ணெய் சருமத்திற்கு

ரோஸ் வாட்டர் மற்றும் சந்தன கலவையை ஒரு கிண்ணத்தில் கலந்து இந்த கலவை எடுத்து உங்கள் முகத்தில் தடவும் இந்த ஃபேஸ் பேக்குகள் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது.
வறண்ட சருமத்திற்கு
பால் அல்லது ஆரஞ்சு சாறுடன் சந்தன பொடியை கலந்து முகத்தில் தடவி வர வறண்ட சருமத்திற்கு இது சிறந்ததாக இருக்கிறது.
முகப்பருவை குறைக்க

சந்தன பொடி எடுத்து அதில், மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ஆக தயாரித்து அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவும் இது குளிர் விப்பதுடன் மட்டுமல்லாமல் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது.
பிரகாசமான சருமத்திற்கு
தயிர், பால் மற்றும் சந்தன பொடியை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பத்து நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். தயிர் ஒரு சிறந்த கிளன்சர் அந்த தயிரை சந்தன பொடியுடன் சேர்ந்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால் சருமம் மென்மையாவதோடு வெள்ளையாகவும் மாறிவிடும்.
இளமையான சருமத்திற்கு
முட்டையின் வெள்ளை கரு மற்றும் சிறிது ஆப்பிள் ஜூஸ் சந்தன பொடி ஆகவற்றை கலந்து சருமத்தில் தடவி வர சருமம் இளமையாக காணப்படும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

சந்தன பொடியுடன், தக்காளியை அரைத்து கலந்து வேண்டுமானால், சிறிது முல்தானி மெட்டியும் சேர்த்து கலந்து ஃபேஸ் பேக்காக போடலாம். சந்தன பொடியுடன் முல்தானி மெட்டி பவுடருடன் சேர்த்து ஃபேஸ் பேக் ஆக போட்டால் சிறந்த பலனை விரைவில் அடையளாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

