தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாற்றுச் சாதனையாக சுமார் 85% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதிகப்படியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கு முக்கியக் காரணமாக இது சொல்லப்படுகிறது.

இது தமிழக தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிகமான வாக்குப்பதிவு சதவீதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி சினிமா நட்சத்திரங்களும் காலையிலேயே வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியது மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சினிமா நட்சத்திரங்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தி ரசிகர்களுக்கும் வேண்டுகோள் வைத்திருந்தனர்.
ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)
அந்த வகையில், வாக்கு பதிவு முடிந்த பிறகு பிக் பாஸ் ராஜூ ஜெயமோகன் ஒரு அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். கையில் வைத்த மை தரம் சரியில்லை என அவர் கூறியிருக்கிறார். இது தான் ink தரமா என ராஜூ ஜெயமோகன் கேள்வி கேட்டிருக்கிறார்.


