கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா. வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், சிறுத்தை, வீரம், பாகுபலி என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்தார். ஒரு கட்டத்தில், தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், படு கவர்ச்சியாக படுக்கையறை காட்சிகளில் வரம்பு மீறி நடித்திருந்தார்.

முன்னதாக, ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலா பாடலுக்கு அவர் ஆடிய டான்ஸ் தமன்னாவை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது என்றே சொல்லலாம். அதனை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் மசாலா சாங் காக தமன்னா ஆடி வந்தார். வில்லியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக மாறியவர் தமன்னா. இவரை ரசிகர்கள் மில்க் பியூட்டி எனவும் கொண்டாடுகின்றனர். கிட்டத்தட்ட 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமன்னா தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, மும்பையில் சென்ற அவருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, அவர் தன்னிடம் இருந்த பூக்களை தமன்னாவிடம் கொடுத்து போஸ் கொடுத்தார்.
அந்த பூக்களை தமன்னாவிடம் கொடுத்து விடுவார் என்று நினைக்கையில் எதிர்பார்க்காத விதமாக அவரே போட்டோ எடுத்து முடித்ததும் தமன்னாவிடமிருந்து அதை வாங்கி சென்றார். இதனை பார்த்த நெட்டிசன்களோ தமன்னாவுக்கு இப்படி அசிங்கமா போச்சே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

