நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.

இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

இப்பிரிவிற்கு பிறகு கெனிஷாவுடன் ரவிமோகன் மிகவும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறார். இந்நிலையில், எப்பொழுதுமே கவர்ச்சியான உடையில் புகைப்படம் வெளியிட்டு வருவார். திடீரென்று குடும்ப பெண்ணாக மாறி சேலையில் தற்போது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

