எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது. இந்த நேரத்தில், முழு படத்தையும் இணையதளத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!
இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள படத்தின் ஃப்ரீ லான்ச் எடிட்டர் உமாசங்கர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சம்பந்தப்பட்ட திரைப்படத்தை நான் யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை என்றும், யாரிடமும் பகிரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படம் இணையதளத்தில் வெளியான சம்பவத்துடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அப்பாவியான என்னை இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும், உமா சங்கர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தன்னை எதிர்த்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், எடிட்டரின் மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் இந்த வழக்கில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தவித சலுகையும் வழங்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக தனி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், படம் இணையதளத்தில் கசிந்தபின் எடிட்டர் உமாசங்கர் திடீரென இதய நோய் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தயாரிப்பு நிறுவனமும் குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையான மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

அதேசமயம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த வழக்கு திரைப்பட உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து அடுத்த விசாரணையில் வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

