வெயிலுக்கு இதமாக ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் நாவில் கரையும் தேங்காய் பால் பர்பி குழந்தைகளுக்கு காலை உணவாக கூட சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த தேங்காய் பால் பர்பி உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கப் தேங்காய் பால்
- ஒரு கப் துருவிய தேங்காய்
- முக்கால் கப் பனங்கற்கண்டு
- இரண்டு டீஸ்பூன் நெய்
- கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி
செய்முறை
Step 1: அடி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடு செய்யவும். அதில், தேங்காய் பாலும் பனங்கற்கண்டையும் சேர்த்து கரைய விடவும். பிறகு துருவிய தேங்காயை சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
மாம்பழம் இருந்தா போதும்.. சுவையில் அசத்தும் கேரளா ஸ்பெஷல் பாயாசம்..!
Step 2: கலவை நன்றாக கெட்டியாகிய பின் பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும்போது அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
Step 3: நெய் தடவிய தட்டில் ஊற்றி சமப்படுத்தி குளிர்ந்த பின் சதுரங்களாக வெட்டி பரிமாறவும். சுவையான தேங்காய் பால் பர்பி ரெடி. குளிர்சாதன பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம் சுவை அல்டிமேட் ஆக இருக்கும்.

