தேவையான பொருட்கள்
- பீர்க்கங்காய் – 1 (தோல் சீவி நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் – 3 அல்லது 4
- பூண்டு – 4, 5 பற்கள்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்
- உப்பு மற்றும் கொத்தமல்லி தழை – தேவையான அளவு
செய்முறை
Step 1: முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். அதன்பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
மணமும் சுவையும் கொண்ட மிளகு சீரக இட்லி.. சாதாரண இட்லிக்கு பாய் பாய் சொல்லுங்க..!
Step 2: தக்காளி குழைந்தவுடன், நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயைச் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். (பீர்க்கங்காயில் தண்ணீர் அதிகம் இருப்பதால், தனியாகத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை).
Step 3: காய்கறிகள் அனைத்தும் நன்கு வெந்ததும், இறக்கி ஆறிய பிறகு மத்து கொண்டு மசிக்கவோ (கடையல்) அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தோ எடுக்கலாம்.
Step 4: சுவையான, சத்தான பீர்க்கங்காய் தக்காளி சட்னி தயார்! இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்துடன் சாப்பிட இது மிக அருமையாக இருக்கும்.

