பொதுவாக கேரளாவில் செய்யக்கூடிய பாயாசம் தமிழ்நாட்டில் செய்யப்படும் பாயாசத்தை போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். கேரளாவில் அரிசி, பலாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வைத்து பாயாசம் செய்வார்கள். கோடைகாலத்தில், மாம்பழ சீசன் தொடங்கும் போது அதை வைத்துக் கூட பாயாசத்தை செய்வார்கள். இந்த மாம்பழ பாயாசத்தை எப்படி செய்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!
தேவையான பொருட்கள்
- நான்கு நன்கு பழுத்த மாம்பழம்
- ஒரு கப் வெள்ளம்
- 2 1/2 மூடி தேங்காய்
- ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய்
- பத்து முந்திரி
- 15 திராட்சை
- இரண்டு ஏலக்காய்
- அரை மூடி தேங்காய்
- 1/4 டீஸ்பூன் சுக்குத்தூள்
- ஒரு சிட்டிகை உப்பு
செய்முறை
Step 1: முதலில் மாம்பழத்தை சுத்தமாக கழுவி நறுக்கி அதனுள் இருக்கும் சதைப்பகுதியை வெட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும். வெட்டி எடுத்துக் கொண்ட மாம்பழத்தின் சதைப்பகுதிகளில் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளத்தை சிறிய, சிறிய துண்டுகளாக உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

Step 2: வெல்லமும் தண்ணீரும் நன்றாக கரைந்து வடித்து தூசி மற்றும் மண்ணை எடுத்துக் கொள்ளவும். பின்னர், இரண்டு மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கியோ எடுத்துக் கொள்ளவும். அதனை மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து பால் பிழிந்து தனியாக வைக்கவும்.
Step 3: மீண்டும் அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் பிழிந்து தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்று வெந்து கெட்டியாக துவங்கியதும், அது உடன்படித்த வெல்லப்பாகை சேர்த்து நன்றாக கலக்கவும்.
Step 4: இரண்டாவது முறை அரைத்து எடுத்த தேங்காய் பாலை மிதமான தீயில் நன்கு கிளறவும். கடைசியாக இதனுடன் கெட்டியாக அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் உப்பு மற்றும் சுக்கு பொடி சேர்த்து கட்டிகள் சேராமல் கலந்து விடவும்.
Step 5: பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விடவும். நெய் சூடானதும் அதில் எடுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அது உடன் ஏலக்காய் மற்றும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து வறுத்து அதனுடன் பாயாசத்துடன் சேர்ந்து கிளறினால் நல்ல சுவையான மாம்பழ பாயாசம் ரெடி.

